“அந்த நடிகை வேண்டாம்” ; நடிகரின் மனைவி போர்க்கொடி..!


கடந்த பதினைந்து நாட்களாக தமிழ், மலையாளம் என இரண்டு திரையுலகிலும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிகழ்வு என்றால் அது ஏ.எல்.விஜய் அமலாபால் இருவரும் விவாகரத்து கேட்டு கோர்ட் படி ஏறியது தான். ஒகே அந்த விவகாரத்துக்குள் போக வேண்டாம்.. ஆனால் இதன் கிளை விவகாரம் ஒன்று துளிர் இப்போது விட்டுள்ளதாம்.

அமலாபால் மீண்டும் நடிப்பதுதான் அவரது பிரிவுக்கு காரணமாக சொல்லப்படுகிறது. அப்படி தொடர்ந்து வாய்ப்புகளை தரும் ஆட்கள் இருப்பதால் தான் அவர் இப்படி நடந்துகொள்கிறார் என்றும் சொல்லப்படுகிறது..

அப்படி வாய்ப்பு தருபவர்களில் முதல் இடத்தில் இருப்பவர் என்றால் அது தனுஷ் தான்.. ஆம்.. தனுஷ் தயாரித்த ‘அம்மா கணக்கு’ படத்தில் அமலாபால் தான் கதாநாயகி.. இதோ இப்போது அடுத்ததாக தனுஷ், வெற்றிமாறனின் கூட்டணியில் உருவாகும் ‘வடசென்னை’ படத்திலும் அவர்தான் கதாநாயகி.

சொல்லப்போனால் இரண்டு வருடங்களாக தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கப்போகும் இந்த வடசென்னை படத்தில் நடிக்க அமலாபால் ஒப்பந்தமானதுதான் விஜய்-அமலாபால் உறவில் இருந்த சிறிய விரிசலை பெரிதாக்கி உடைத்தே போட்டது என்றும் சொல்கிறார்கள்..

அதனால் இப்போது தனுஷ் தரப்பில் இருந்து, குறிப்பாக அவரது மனைவி ஐஸ்வர்யா ‘வடசென்னை’ படத்தில் இருந்து அமலாபாலை நீக்கவேண்டும் என போர்க்கொடி தூக்கியிருக்கிறாராம்.. தனது தந்தையின் சிகிச்சை மற்றும் ஓய்வை கவனிப்பதற்காக அமெரிக்கா சென்ற நேரத்தில் இந்த வேலையில்லா பட்டதாரிகளின் நட்பு இறுகியதை கேள்விப்பட்டுத்தான் ஆரமபத்திலேயே இதை கிள்ளி எறியவேண்டும் என உறுதியாக இருக்கிறாராம்.