“அஜித் கொடுக்கலை.. சொந்தக்காசுல தான் வீடு கட்டுறேன்” ; அப்புக்குட்டி குமுறல்..!


இந்த அஜித் ரசிகர்கள் இருக்கிறார்களே… அவர்களது ஆன்லைன் அட்ராசிட்டிக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.. ‘வீரம்’ படத்தில் ‘தம்பி மயில்வாகனம்’ என அப்புக்குட்டியை ஆசையோடு அழைப்பார் அஜித்.. அதன்பின் அவரது திருமண காட்சியில் ஒரு கடையையே அவர் பெயரில் சொந்தமாக எழுதி வைப்பார்..

நிற்க.. இப்போது அப்புக்குட்டி சென்னையில் சொந்தமாக வீடு கட்டிக்கொண்டு இருக்கிறார். ஆனால் இந்த வீட்டை அஜித் தான் அவருக்கு கட்டித்தருவதாக கூறி ‘என்னே அஜித்தின் உயர்ந்த உள்ளம்’ என சோஷியல் மீடியாவில் செய்தி பரப்பி வருகிறார்களாம். காகித கப்பல் என்கிற படத்தில் ஹீரோவாக நடித்துள்ள அப்புக்குட்டி, அதன் ஆடியோ ரிலீசுக்கு வந்தபோது இதுபற்றி கேட்டபோது பொங்கிவிட்டார்..

“அஜித் எனக்கு வீடு கட்டித்தரவில்லை.. நான் சினிமாவில் நடித்து சம்பாதித்த காசில் தான் சொந்தமாக வீடு கட்டுகிறேன்.. அதேபோல நான் சம்பளம் வாங்காமல் நடிக்கிறேன் என செய்தி பரப்புகிறார்கள்.. பணம் வாங்காமல் யாராவது நடிப்பார்களா..? சினிமாவுக்கு வந்ததே பணம் சம்பாதிக்கத்தானே.. அதனால் இதுபோன்ற உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பாதீர்கள்” என குமுறிவிட்டார்..