விஜய்யிடம் நேர்மை தவறிய அமலாபால்..!


இனி அமலாபால் விவகாரத்தை கிளறக்கூடாது என்று முடிவெடுத்த வேளையில் தான், அவரது காதல் கணவரான ஏ.எல்.விஜய், தானும் அமலாபாலும் பிரிந்துவிட்டோம் என்றும் பிரிவதற்கான அடிப்படை காரணம் இதுதான் என்றும் ஒரு விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளார்…

அதில் பல விஷயங்களை அவர் மேலோட்டமாக குறிப்பிட்டிருந்தாலும் கூட திருமண பந்தத்தில் அமலாபால் நேர்மை தவறிவிட்டார் என்பதை தெளிவாகவே சொல்லியிருந்தார். அந்த அறிக்கையின் சில முக்கிய வாக்கியங்களை மட்டும் பார்த்தாலே இது எளிதில் புரியும்.

“எங்களின் பிரிவிற்கு என்ன காரணம் என்பது எனக்கு மட்டும் தான் தெரியும். நம்பிக்கை, நேர்மை ஆகிய இரண்டு குணங்களும் தான் ஒரு வலுவான திருமண வாழ்விற்கு சிறந்த பாலமாக செயல்படுகிறது. அந்த இரண்டும் உடைந்த பிறகு திருமண வாழ்வை தொடர்ந்தால், அதில் எந்தவித அர்த்தமும் இருக்காது. நாங்கள் இருவரும் பிரிந்துவிடுவோம் என கனவில் கூட நான் நினைத்ததில்லை, ஆனால் இன்றைக்கு அது நடந்துவிட்டது” என அந்த நீண்ட அறிக்கையில் இந்த விஷயத்தை குறிப்பிட்டுள்ளார்.