நயன்தாராவை தூக்கியடித்த ஹரி..!


பொதுவாக கதாநாயகிகள் தங்களை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய தங்கள் குருநாதரிடம் காலாகாலத்திற்கும் விசுவாசமாக இருப்பதுதான் வழக்கம்.. பல நடிகைகளிடம் அதை நாம் பார்த்தும் வருகிறோம். ஒரு சிலர் மட்டும் காலப்போக்கில் அளவுக்கதிகமான புகழ் கிடைத்ததும் பழையதை எல்லாம் மறந்து விடுவார்கள். நயன்தாராவும் அந்தப்பட்டியலில் இணைந்துவிட்டவர்தான்.

ஆம்.. தான் இயக்கிய ‘அய்யா’ படம் மூலம் அவரை தமிழ்சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் ஹரி தான். ஆனால் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் சிங்கம்-2’ படத்தில் ஒரு பாட்டுக்கு மட்டும் ஆட நயன்தாராவை அழைத்தாராம் ஹரி.. ஆனால் நயன்தாராவோ பீக்கில் இருந்ததால், தன்னால் ஒரு பாட்டுக்கு ஆட முடியாது என கூறிவிட்டாராம்.

இத்தனைக்கும் ‘சிவாஜி’, ‘சிவகாசி’ என ரஜினி, விஜய் ஆகியோரின் படங்களில் ஒரு பாட்டுக்கு ஆடியவர்தானே நயன்தாரா..?அதன்பின்னர்தான் அவர் அஞ்சலியை வைத்து அந்த பாட்டை படமாக்கினார். அதனால், தான் பார்த்து ஆளாக்கிவிட்ட நயன்தாரா, தன்னையே மதிக்கவில்ல எனும்போது அவருக்கு தக்க பாடம் புகட்ட ஹரிக்கு இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளதால் அதை சரியாக பயன்படுத்திக்கொண்டாராம் ஹரி..

அதாவது விக்ரமை வைத்து அடுத்ததாக ‘சாமி-2’ படத்தை ஹரி இயக்கவுள்ளார் அல்லவா..? தற்போது ‘இருமுகன்’ படத்தில் தன்னுடன் ஜோடியாக நடித்துவரும் நயன்தாராவையே ‘சாமி-2’வுக்காகவும் சிபாரிசு செய்தாராம் விக்ரம்.. ஆனால் ஹரியோ, ஒரே வார்த்தையில் ‘முடியாது’ என மறுத்துவிட்டு, தற்போது வேறு கதாநாயகியை தேடிக்கொண்டு இருக்கிறாராம்.