தனுஷுக்கு எட்டாதது சிவகார்த்திகேயனுக்கு எட்டியது எப்படி..?


வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் வடசென்னை படத்தில் நடிப்பதாக இருந்த சமந்தா, அதன்பின் நடிகர் நாகசைதஞாவுடன் தனது திருமணம் உறுதியானதால் அந்தப்படத்தில் இருந்து விலகிக்கொண்டார்.. அதன்பினர்தான் அந்த கேரக்டரில் நடிப்பரசி அமலாபால் சேர்க்கப்பட்டார். அந்தப்படத்தின் படப்பிடிப்பு சுமார் இரண்டு வருடம் நடக்கும் என சொல்லப்பட்டதும் சமந்தா விலக முக்கிய காரணம்.

அதேசமயம் தற்போது சிவகார்த்திகேயன் படத்தில் சமந்தா ஜோடியாக நடிக்கிறார் என்கிற அறிவிப்பு வெளியானபோது பலரும் ஆச்சர்யப்பட்டார்கள்.. ஆனால் சிவாவின் படத்தில் சமந்தா சம்பந்தப்பட்ட காட்சிகளை முதலில் எடுத்துவிடுவதாக இயக்குனர் பொன்ராம் கூறியதால் சமந்தா இந்தப்படத்தை ஒப்புக்கொண்டாராம்.

இன்னொருபக்கம், தங்கமகன் சமயத்தில் தனுஷுடன் சில கசப்பான அனுபவங்கள் சமந்தாவுக்கு கிடைத்ததாகவும் அதனால் தான் அனதப்படத்தை வர நிராகரித்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.