கௌதமியிடம் தகராறு செய்தாரா ஸ்ருதிஹாசன்..?


என்னதான் இருந்தாலும் ஸ்ருதிஹாசனின் வளர்ப்புத்தாய் என்கிற நிலையில் தான் கௌதமி இருக்கிறார் என்றும் அதனாலேயே ‘சபாஷ் நாயுடு’ படத்தில் ஸ்ருதிஹாசன் உடை விஷயத்தில் அவர் தலையிட்டதால் ஸ்ருதிக்கும் கௌதமிக்கும் ஏதோ மனக்கசப்பு என்றும் ஆளாளுக்கு செய்தி பரப்ப ஆரம்பித்து விட்டார்கள்.

ஆனால் விசாரித்ததில் அப்படி எதுவும் சண்டை இல்லை என்றே தெரிகிறது. சபாஷ் நாயுடு படத்தில் உடையமைப்பாளராக பணியாற்றும் கௌதமி, அந்தப்படத்தில் ஸ்ருதிஹாசன் கேரக்டருக்காக ஒரு உடையை வடிவமைத்தாராம். ஆனால் பிற்பாடு கதைப்போக்கின்படி ஸ்ருதியின் கேரக்டர் சற்றே மாற்றம் செய்யப்பட்டதால் அந்த கேரக்டருக்கு அந்த உடை பொருத்தமாக இருக்காது என கௌதமியிடம் சொல்லப்பட்டதாம்.

சினிமாவிலேயே இருக்கும் கௌதமிக்கு இது தெரியாதா என்ன..? உடனே வேறு உடை ஒன்றை தயார் செய்துவிட்டாராம்.. அந்த உடை எப்படி இருக்கவேண்டும் என்கிற ஐடியாவை மட்டும் கௌதமிக்கு கொடுத்து, உதவிதான் செய்தாராம் ஸ்ருதிஹாசன்..

ஏம்ப்பா நல்லா இருக்க குருவிக்கூட்டுல கல்லு ஏறியுறீங்க..?