அரசு முத்திரையுடன் கபாலி டிக்கெட் கேட்டு அனுப்பிய அமைச்சரின் பி.ஏ..!


நாளை மறுதினம் சூப்பர்ஸ்டாரின் கபாலி’ படம் வெளியாக இருக்கும் நிலையில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் செம ஹேப்பியாகவும், டிக்கெட் கிடைக்காதவர்கள் சோகத்திலும் இருப்பதை சோஷியல் மீடியாவில் வைரலாகும் கருத்துக்கள் மூலம் பார்க்க முடிகிறது.. சிலர் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தியும் கபாலி டிக்கெட்டை கைப்பற்றி வருகின்றனர்..

அந்த வகையில் தகவல் ஒளிபரப்பு துரை அமைச்சரின் பி.ஏவான பிரேம்குமார் என்பவர் தனக்கு கபாலி படத்தின் முதல் காட்சிக்கு 10 டிக்கெட்டுகள் வேண்டும் என்று அரசாங்க தாளில் ஒரு கடிதம் டைப்படித்து அலுவக ரப்பர் ஸ்டாம்ப் முத்திரை குத்தி பச்சை மையில் கையெழுத்தும் போட்டு தனது உதவியாளரிடம் கொடுத்து அனுப்பியுள்ளார்..

இந்த கடிதம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது. ஆக, கபாலி ஜுரம் அரசு அதிகாரிகளையும் விட்டுவைக்கவில்லை பாருங்கள்.