“என் இஷ்டம்” ; பெற்றோரிடம் சீறிய அமலாபால்..!


பொதுவாக ஒரு நடிகர் ஆரம்பத்தில் கொடூரமான வில்லனாக நடித்தாலும் பின்னாளில் அவரை கதாநாயகனாக, தங்களை ரட்சிக்க வந்த தெய்வமாக ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு ரசிகர்கள் வந்து விடுகிறார்கள்.. ஆனால் நடிகைகள் விஷயத்தில் அவர்களால் அப்படி மாறமுடிவதில்லை.. ரசிகர்களில் அதிகப்படியானவர்கள் அவர்களை ஆரம்ப காலத்தில் எப்படி பார்த்தார்களோ அந்த இமேஜுடன் தான் அவர்களை கடைசிவரை பார்க்கிறார்கள்..

மலையாளத்தில் இருந்து வந்தாலும், தமிழில் வீரசேகரன் படத்தில் அறிமுகமானாலும் கூட, அடுத்ததாக சிந்து சமவெளி எனும் கில்மா படத்தில் நடித்தபின் தான் அமலாபால் ரசிகர்களிடம் தெரிய ஆரம்பித்தார்.. அதற்காக அவரிடம் அழகும் வசீகரமும் கொட்டிக்கிடந்தது என அர்த்தமல்ல.. அந்தப்படத்தில் மாமனாருடன் கள்ள உறவு கொள்ளும் மருமகள் கதாபாத்திரத்தில் நடித்தார். இந்தப்படம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுவே அமலாபாலுக்கு நல்ல விளம்பரமாகவும் அமைந்துவிட்டது.

இதன்மூலம் அமலாபாலுக்கு கில்மா நடிகை என்கிற இமேஜ் அழுத்தமாக ஏற்பட்டுவிட்டது.. ஆனால் அந்தப்படம் வெளிவருவதற்கு முன்பே இயக்குனர் பிரபு சாலமன் அதைப்பற்றி எல்லாம் அறியாமல், அமலாபாலை தனது மைனா படத்தில் நடிக்க வைத்திருந்தார்..

மைனா படம் வெளியாகி ஹிட்டாக, அது அமலாபாலையும் முன்னணி நடிகை ரேஞ்சுக்கு மாற்றியது. அதன்பின் விஜய்க்கு ஜோடியாகும் வரை அவர் நிலை உயர்ந்தாலும், அமலாபாலை பார்க்கும் ரசிகர்களிடம் அவரின் முந்தைய ‘கில்மா’ இமேஜ் மட்டும் மாறவே இல்லை.

இந்த சமயத்தில் தெய்வத்திருமகள் பட ஷூட்டிங் சமயத்தில் இயக்குனர் ஏ.எல்.விஜய் மற்றும் அமலாபாலின் காதல் டெவலப் ஆக ஆரம்பித்தது. அந்த காதல் தான் அமலாபாலை ‘தலைவா’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக்கி அழகு பார்த்தது. அமலாபால்-இயக்குனர் விஜய்யின் காதல் களியாட்டங்கள் நடிகர் பார்த்திபனால் ஒரு மேடையில் போட்டு உடைக்கப்பட, பலருக்கும் அதிர்ச்சி..

விஜய்யின் டேஸ்ட் இப்படியா இருக்கவேண்டும் என அவரது நண்பர்கள் பலரே விமர்சித்தார்கள்.. விஜய்யின் குடும்பத்தினருக்கு கூட அமலாபாலை ‘சிந்து சமவெளி மருமகள்’ என்கிற கண்ணோட்டத்துடன் தான் பார்க்க முடிந்தது.. மகன் விருப்பம் என ஒதுங்கி கொண்டார்கள். ஆனாலும் இது கல்யாணம் வரை போகாது என்றே பலர் நினைத்துக்கொண்டிருக்க, திடீரென கல்யாண பத்திரிகையை நீட்டியது இந்த ஜோடி.

காதல் மோகத்தில் இருந்தபோது, திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்க மாட்டேன் என விஜய்யிடம் சத்தியம் செய்தாராம் அமலாபால். ஆனால் உண்மையில் சினிமா என்னும் மாயையில் சிக்கிய அமலாபாலுக்கு அதைவிட்டு வெளியேவர விருப்பம் இல்லையாம்.. அடுக்களை மருமகளாக இருப்பதை அவர் விரும்பவே இல்லையாம்.

இவர்கள் திருமணம் முடிந்த ஒரு வருடம் கழித்து ஒரு விழா மேடையில் அமலாபாலை பார்த்தபடி இயக்குனர் விஜய்யிடம், இன்னும் ஏதும் விஷேசம் இல்லையா என இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் கேட்டார். அப்போது அமலாபாலின் முகம் கடுகடுவென மாறியதை வெகுசிலர்தான் கவனித்திருப்பார்கள்..

காரணம் உடனடியாக குழந்தை பெற்றுக்கொள்வதிலும், அதன் காரணமாக சினிமாவில் இருந்து ஒதுங்குவதிலும் அமலாபாலுக்கு விருப்பம் இல்லையாம். அடுத்தடுத்து தமிழ், மலையாள படங்களில் நடிக்க வாய்ப்பு வர, ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்குமா..? கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி படங்களில் நடிக்க ஆரம்பித்தார்..

இதுபோன்ற சமயங்களில் ‘எங்கள் பெண் இப்படித்தான்’ என நடிகையின் வீட்டார், அவருக்குத்தான் ஆதரவாக நிற்பார்கள்.. ஆனால் அமலாபால் விஷயத்தில் அது நேரெதிர்.. அவர்கள் வழக்கமான பெற்றோராக இருந்திருந்தால் அமலாபால் முன்னணி நடிகையாக இருந்த சமயத்தில் காதல், கல்யாணம் என சொன்னபோதே, அவரது சம்பாத்தியம் தான் முக்கியம் என எதிர்த்திருப்பார்கள்.. ஆனால் இவர்கள் அப்படி செய்யவில்லை.

அவரது பெற்றோர்களுக்கு ஏ.எல்.விஜய்யின் நல்ல மனம் புரியும். அதனால் அமலாபாலிடம் உனக்கு நல்ல வாழ்கை அமைந்திருக்கிறது. அதை பாழாக்கி கொள்ளாதே என அடிக்கடி மகளை நல்வழிக்கு திருப்ப முயற்சித்தார்களாம்.. ஆனால் சினிமா போதையில் இருந்த அமலாபாலின் காதுகளில் அது ஏறவில்லையாம். ஒருகட்டத்தில், “அது என் இஷ்டம். என் விஷயத்தில் தலையிடாதீர்கள்” என பட்டென கூறிவிட்டு சென்னையிலேயே தனி வீடு பார்த்து, அங்கிருந்து படப்பிடிப்புக்கு போய்வர ஆரம்பித்தாராம் அமலாபால்.

அமலாபாலின் இந்த நடவடிக்கைகளுக்கு பின்னியில் திருமணமான ஒரு இளம் நடிகர் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் ஏ.எல்.விஜய்யின் நிலைதான் இப்போது அந்தல சிந்தல ஆகிவிட்டது.