காதலனை மட்டம் தட்டிய சமந்தா..! கடுப்பில் மாமனார்..!


ஒருவரை புகழ வேண்டும் என்றால் அவரைப்பற்றி மட்டுமே உயர்வாக பேசுவது ஒருவகை.. இன்னொருவர்ரை மட்டம் தட்டி அவருடன் ஒப்பிட்டு சம்பந்தப்பட்டவரை புகழ்வது இன்னொருவகை.. ஆனால் பலரும் முதல் வகையில் ஒரு நபரை புகழும்போது தங்களையறியாமல் இன்னொரு நபரை மட்டம் தட்டவே செய்கிறார்கள்..

உதாரணமாக, நான் நடித்த படங்களில் இந்த கேரக்டர்தான் எனது மனதுக்கு பிடித்தது என ஒரு நடிகை சொன்னால், அவர் அதற்கு முன் நடித்த படங்களின் பல இயக்குனர்களை அவரையறியாமலேயே மட்டம் தட்டுகிறார் என அர்த்தம்.

இதுவாவது பரவாயில்லை.. ஆனால் நடிகை சமந்தா, அறிந்தே ஜூனியர் என்.டி,.ஆரை புகழ்கிறேன் என நடிகர் நாக சைதன்யாவை, அதாங்க அவர் காதலித்து கல்யாணம் செய்யப்போகிறாரே அவரை மடம் தட்டியுள்ளதுதான் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.

அப்படி என்ன பண்ணினார் சமந்தா.? நம்ம பல்லாவரத்து பொண்ணுதான் என்றாலும் தெலுங்கில் அழுத்தமாக காலூன்றிய பின்னரே தமிழுக்கு வந்தார் சமந்தா.. தற்போது இரண்டு மொழிகளிலும் பிசியான ஹீரோயினாக இருக்கும் இவர், சில வருடங்களுக்கு முன் நடிகர் சித்தார்த்துடன் திருமணம் வரை இணைத்து கிசுகிசுக்கப்பட்டவர்.

ஆனால் இப்போது எதிர்பாராத திருப்பமாக தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவுக்கும் இவருக்கும் காதல் மலர்ந்தது.. சமந்தாவின் முதல் தெலுங்கு பட ஹீரோ, நாக சைதன்யா தான் என்பது கவனிக்கத்தக்கது. தற்போது அதை திருமண நிகழ்வு வரை அழைத்து செல்ல பெற்றோர்களிடம் சம்மதம் வாங்கிவிட்டார்கள்..

ஏற்கனவே பிருந்தாவனம் என்கிற படத்தில் ஜூனியர் என்.டி.ஆருடன் இணைந்த நடித்துள்ள சமந்தா, தற்போது அவருடன் ‘ஜனதா கேரேஜ்’ என்கிற படத்தில் ஜோடியாக நடித்துள்ளார். விரைவில் வெளியாக இருக்கும் இந்தப்படத்தின் புரமோஷனுக்காக சமந்தாவிடம் படத்தின் நாயகன் ஜூனியர் என்.டி.ஆர் பற்றி கேட்கப்பட்டது.

இங்கேதான் சனி சடுகுடு ஆடத்தொடங்கியது.. “நான் இரண்டாவதாக நடித்த படமே ஜூனியர் என்.டி.ஆரின் ‘பிருந்தாவனம்’ தான். இத்தனைக்கும் அப்போது நான் ஒரு படம் மட்டுமே நடித்திருந்த நிலையில், அதுவும் நாகசைதன்யா போன்ற சிறிய நடிகருடன் (கவனிக்கவும்.. ‘சிறிய நடிகருடன்’..) நடித்திருந்த நேரத்தில் அவர் படத்தில் நடிக்க என்னை அழைத்தபோது மிகவும் பயந்தேன்..” என மேலும் சில வாக்கியங்களை கூறி ஜூனியர் என்.டி.ஆரை வானளாவ புகழ்ந்துள்ளார் சமந்தா.

ஜூனியர் என்.டி.ஆரை என்னவேண்டுமானாலும் புகழ்ந்துவிட்டு போகட்டும். அதற்காக .நம்ம வீட்டு பையனை, அதுவும் கல்யாணம் பண்ணிக்கொள்ளப் போகிறவரை ‘சின்ன ஹீரோ’ என எப்படி மட்டம் தட்டலாம் என்று நாகார்ஜுனா அன் கோ செம கடுப்பில் இருக்கிறார்களாம்.