ஒரு வருடமாக ஊடகங்களின் கண்களில் மண்ணை தூவிய விஜய்-அமலாபால் தம்பதி..!


எல்லாமே சடசடவென நடந்து முடிந்துவிட்டன. இதோ விவாகரத்து கேட்டு கோர்ட் படி ஏறிவிட்டார்கள் அமலாபாலும் இயக்குனர் விஜய்யும்.. இது என்னவோ கடந்த ஒரு மாதத்திற்குள் நடந்து திடீரென எடுத்த முடிவில்லை.. இவர்கள் அளித்த மனுவிலேயே தாங்கள் கடந்த 2015 மார்ச் மாதம் முதல் பிரிந்து வாழ்வதாக கூறியுள்ளார்கள்.. திருமணமான ஒரு வருடத்திற்குள்ளேயே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது இப்போதுதான் தெரிகிறது..

ஆனால் இதில் முக்கியமான ஒரு விஷயத்தை கவனித்தீர்களா.? கடந்த வருடம் ஏப்-6ஆம் தேதி, அதாவது இவர்கள் பிரிந்து வாழ ஆரம்பித்ததாக மனுவில் குறிப்பிட்டிருந்த தேதிக்கு அடுத்த மாதமே, விஜய் இயக்கிய ‘இது என்ன மாயம்’ படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது.. அந்தவிழாவில் அமலாபாலும் உற்சாகமாகவே கலந்துகொண்டார். விஜய்கிட்ட ஒரு கெட்ட பழக்கம் இருக்கு.. ஹாலிடேக்காக எங்கேயாவது போனால்கூட கதை சொல்லிட்டே இருக்கும்” என்று கூட செல்லமாக கிண்டல் செய்தார்.

அதுமட்டுமல்ல, கடந்த ஆகஸ்ட் மாதம் நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனு பாக்யராஜின் திருமண வரவேற்பு நடைபெற்றது இல்லையா..? அந்த நிகழ்ச்சியிலும் கூட தங்களது கருத்து வேறுபாடுகளை மறைத்துக்கொண்டு தான், தம்பதி சமேதராக வந்து மணமக்களை வாழ்த்தி சென்றுள்ளார்கள்.. இது இப்படியே இன்னும் கொஞ்சநாள் போயிருக்கு விஜய்யின் தந்தை ஏ.எல்.அழகப்பன் மூலம் விஷயம் வெளியே வராமல் இருந்தால். ஆனால் இந்த ஒரு வருடத்திற்கு மேலாக எந்த மீடியாவாலும் இவர்கள் பிரிவை கண்டுபிடிக்க முடியவே இல்லையே..?