அமலாபாலை தூண்டிவிட்டு குடும்பத்தை கலைத்த சூத்திரதாரி இவரா..? அதிர்ச்சி தகவல்..!


அமலாபால்-ஏ.எல்.விஜய் விவாகரத்து முடிவுக்கு ஆளாளுக்கு ஒரு காரணம் சொல்லிக்கொண்டு அலைகிறார்கள். ஆனால் அதில் லேட்டஸ்டாக கிடைத்த தகவல் தான் அதிர்ச்சியடைய வைக்கும்படி இருக்கிறதாம். ஆம்.. அமலாபாலின் ஒவ்வொரு அசைவையும் தீர்மானிப்பது அவரது அம்மாதான் என்றும் அவர்தான் பின்னாலிருந்து அமலாபாலை இயக்குகிறார் என்றும், புதிய தகவல் ஒன்று உலாவருகிறது.

கேரளாவை சேர்ந்த அமலாபாலை தமிழ்நாட்டுக்கு அழைத்துக்கொண்டு அவரது அம்மா இங்கே வந்ததற்கு காரணமே தனது மகளை முன்னணி நடிகையாக்கி அழகு பார்க்கவேண்டும் என்பதற்காகத்தானம்.. தனது எண்ணப்படி அதை சாதித்தும் விட்டார். ஆனால் பெரும்பாலான நடிகைகளின் அம்மாக்களுக்கே இருக்கும் பணம், புகழ் இரண்டையும் இழக்க விரும்பாமை வியாதி அமலாபாலின் அம்மாவுக்கும் இருக்கிறதாம்.

அதனால்தான் தனது மகள் பேக்கில் இருக்கும்போதே காதலிப்பதையும் திருமணம் செய்வதையும் அவர் விரும்பவே இல்லை என்றும் சொல்லப்படுகிறது. திருமணம் நடந்தபின் ஒரு நடிகையின் மார்க்கெட் எந்த அளவுக்கு சரிவை சந்திக்கும் என்பதை அவர் அறியாதவர் அல்ல.. அதையும் மீறி அமலாபாலின் பிடிவாதத்தால் திருமணமும் நடைபெற்றது.

அதேசமயம் ஏ.எல்.விஜய் வீட்டில் நடிப்பதற்கே தடை போட்டபோது, எங்கே முதலுக்கே மோசம் வந்துவிடுமோ என அமலாபாலின் அம்மா திகைத்து போய்விட்டாராம். அவரது மந்திராலோசனையின் பேரில் தான் அமலாபாலின் நடவடிக்கைகள் அவரது கணவருக்கும் கணவரின் குடும்பத்தினருக்கும் எதிராக மாறி, இப்போது விவாகரத்து வரை கொண்டுவந்துள்ளது என்று சொல்லப்படுகிறது.