“ஏன் தான் சிம்புவை ஹீரோவா புக் பண்ணினேனோ..? ; புலம்பும் கௌதம் மேனன்..!


தெரிந்தே யாராவது கிணற்றில்.. இல்லையில்லை.. கடலில் கல்லை கட்டிக்கொண்டு குதிப்பார்களா என்ன..? பின் கௌதம் மேனன் மட்டும் ஏன் அப்படி செய்தார்..? இன்றைய காலகட்டத்தில் சிம்பு, ஜெய் இவர்களை வைத்து படம் எடுப்பதும் மேலே சொன்னதும் ஒன்று தான் என்பது சினிமா இண்டஸ்ட்ரியில் ஹாட் டாக்.. ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் சிம்புவை நடிக்க ஒப்பந்தம் செய்தது மடமையடா என புலம்பி வருகிறார் கௌதம் மேனன்.

ஏற்கனவே இழுத்தடித்து இழுத்தடித்து ஒரு வழியாக 90 சதவீத படப்பிடிப்பை முடித்துவிட்ட கௌதம் மேனனால் ‘தள்ளிப்போகாதே’ என்கிற பாடலை மட்டும் இன்னும் படமாக்க முடியவில்லை.. காரணம் சிம்பு தான் ஷூட்டிங்கிற்கே வருவதில்லையே.. பொறுத்து பொறுத்து பார்த்த கௌதம், சிம்பு வந்தால் அந்த பாடல் படத்தில் இருக்கும்.. இல்லாவிட்டால் இடம்பெறாது… ரசிகர்கள் என்னை மன்னித்து விடுங்கள்” என மிகுந்த வருத்ததுடன் சொல்லியிருக்கிறார்.

இத்தனைக்கும் இந்தப்படத்திற்குப்பின்னால் கௌதம் மேனனால் ஆரம்பிக்கப்பட்ட ‘என்னை அறிந்தால்’ படம் கடந்த வருடமே ரிலீஸாகி விட்டது.. அதன்பின் ஆரம்பிக்கப்பட்ட தனுஷ் நடிக்கும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தையும் கூட கிட்டத்தட்ட முடிக்கும் தருவாயில் இருக்கிறார் கௌதம் மேனன்.