நயன்தாராவுக்குத்தான் செட்டாகல ; சமந்தாவுக்காவது செட்டாகட்டுமே..!


நயன்தாராவுக்கும் சமந்தவுக்கும் ஒரு விஷயத்தில் ஒற்றுமை உண்டு.. பொதுவாக சினிமா நட்சத்திரங்கள் காதலில் விழும்போது தங்கள் காதலனை கைபிடிப்பதற்காக எந்த எல்லைக்கும் துணிவார்கள் என்பதி ஓரிரு உதாரணங்களில் சொல்லலாம்.. தனது காதலன் இயக்குனர் ராஜகுமாரனை திருமணம் செய்ய, காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்தவர் தான் தேவயானி..

நயன்தாரா அந்த விஷயத்தில் வேறுமாதிரியான ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார்.. முன்பு பிரபுதேவாவுடன் காதலில் விழுந்தபோது அவரை திருமணம் செய்வதற்காக கிறிஸ்துவ மத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறினார்.. ஆனால் அவர் நினைத்தது வேறு சில காரணங்களால் நடக்கவில்லை.

இப்பொது தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் காதலில் விழுந்து, பெற்றோர்கள் சம்மத்ததுடன் கல்யாணம் வரை வந்திருக்கிறார் சமந்தா.. சமீபத்தில் நாகார்ஜுனா வீட்டில் நடைபெற்ற ஒரு விசேசத்தில் கலந்துகொண்ட சமந்தா, தனது காதலரை திருமணம் செய்துகொள்வதற்காக இந்து மதத்திற்கு மாறியதாக சொல்லப்படுகிறது.. மதம் மாறியும் நயன்தாராவால் சாதிக்க முடியாததை சமந்தாவது சாதித்துவிட்டு போகட்டுமே..