பயத்தால் கெட்டவார்த்தை சொல்லித்தந்த அசோக் செல்வன்..!


சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்று வந்துள்ளார் நடிகர் அசோக் செல்வன். போனவர் சும்மா வரவில்லை ஸ்கை டைவிங் என்கிற சாகசத்தையும் செய்துவிட்டு வந்துள்ளார்.. கூடவே அதில் தனக்கு உதவியாளராக வந்த ஜேக்கப் என்கிற நபருக்கு தமிழில் புழக்கத்தில் உள்ள சில கெட்டவார்த்தைகளை சொல்லிக்கொடுத்து விட்டுத்தான் வந்துள்ளாராம்..

வாண்டேட்டாக கெட்டவார்த்தைகளை சொல்லிக்கொடுக்கவேண்டிய அவசியம் என்ன நீங்கள் சந்தேகப்படலாம்.. அந்த அளவுக்கு அவர் ஒன்றும் மோசமான ஆள் இல்லையாம்.. பயிற்சியாளருடன் சேர்ந்து வானத்தில் இருந்து ஸ்கை டிவிங் செய்வதற்காக குதித்தார் அல்லவா..? அப்போது இருதயமே வாய்க்கு வந்துவிடுவது போன்ற உணர்வு ஏற்பட்டதாம்..

அதனால் பயத்தை மறைப்பதற்காக பயிற்சியாளருடன் பேச்சுக்கொடுத்துக்கொண்டே வந்தாராம். அப்போது தான் அவருக்கு எங்கே தமிழ் தெரியவா போகிறது என்கிற எண்ணத்தில் தமிழில் உள்ள சில கெட்டவார்த்தைகளை சொல்லித்தந்தாராம் அசோக் செல்வன்.