“கத்திக்கு கத்திபோடாம விடமாட்டோம்” இசை வெளியீட்டு விழாவில் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ் அமைப்புகள் தீவிரம் ..


கொஞ்ச நாட்களாகவே பரபரப்பாக பேசப்பட்டுவரும் கத்தி பட விவகாரம் ஒருவழியாக அந்த படத்தின் தயாரிப்பாளர் பத்திரிக்கை சந்திப்புக்கு பிறகு ஒரு முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு இன்னும் முழு நிம்மதி கிடைத்தபாடில்லை ..

“என் படத்தை நானே வெளியிடுவேன் , யாருக்கும் தரமாட்டேன் , திட்டமிட்டபடி இசை விழா நடக்கும் “என்று தயாரிப்பாளர் ஏற்கனவே சொல்லி இருந்தார்
இந்நிலையில் ஏற்கனவே திட்டமிட்டபடி செப் 18ம் தியதி இன்று இசைவெளியீட்டு விழாவை நடத்தியே தீரவேண்டும் என்கிற முனைப்பில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர் .இதற்காக சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் நடத்த திட்டமிட்டு முக்கியமானவர்களுக்கு மட்டும் அழைப்பும் விடுத்து இருக்கின்றனர் .

இந்த தகவலை தெரிந்துகொண்ட தமிழ் அமைப்புகள் இன்று நடைபெறவிருக்கும் விழாவை நடத்தவிடமாட்டோம் என்றும், விழா நடக்கும் ஓட்டலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தபோவதாக அறிவிப்புகளை வெளியாகின்றன …

இந்த நிலையில் கத்தி திரைப்படத்தை ஜெயா டிவி நிறுவனம் வாங்கி விட்டதாகவும் , அதனால்தான் இவ்வளவு தைரியமாக இசைவிழாவை நடத்துகிறார்கள் என்றும் தமிழ் அமைப்புகள் கூறுகின்றன ..

என்னவோ போங்க …. இந்த கத்தியால பலபேரு தொண்டை கிழிய கிழிய பேசுவதும் கொஞ்சபேர் ஆதரிப்பதும் , “ஸ் ஸ் ஸ் அப்பப்பா….. ஒரு முடிவுக்கு வாங்கப்பா என்கிற நிலைமையில் ரசிகர்கள் இருக்கிறார்களாம் ..