தர்பார் சூட்டிங்கில் நயன்தாரா ; மும்பைக்கு போக அடம் பிடிக்கும் விக்னேஷ் சிவன்


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் மும்பையில் பூஜையுடன் தொடங்கியுள்ளது தமிழ்நாட்டில் தேர்தல் தேதி நெருங்கும் வரை படப்பிடிப்பு நடைபெற உள்ளது. அதன் பின்னரும் அங்கே படப்பிடிப்பு தொடர உள்ளது இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருக்கிறார். இதன் தயாரிப்பாளரும் தர்பார் படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் தான்.

தர்பார் படத்திற்காக நயன்தாரா மும்பை சூட்டிங் போவதால் அவரை விட்டு பிரிய மனமில்லாத விக்னேஷ் சிவன், தற்போது, தான் சிவகார்த்திகேயன் படத்திற்காக செய்துவரும் டிஸ்கஷனை மும்பைக்கு மாற்றச் சொல்லி தயாரிப்பாளரிடம் நச்சரித்து வருகிறாராம். அதுமட்டுமல்ல நயன்தாரா எந்த ஹோட்டலில் தங்குகிறாரோ அதே ஹோட்டலில் தனக்கும் ஒரு அறை புக் செய்து தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளாராம்.. இதனால் எரிச்சலான லைக்கா நிறுவனம் விக்னேஷ் சிவனை கொஞ்சம் அடக்கி வாசிக்கும்படி கடுப்படித்து விட்டதாம்