2.Oவில் அர்னால்டு நடிக்க முடியாமல் போனதற்கு சம்பளம் காரணம் இல்லையாம்..!

இந்திரன் இரண்டாம் பாகமாக உருவாகிவரும் 2.Oவில் ரஜினியுடன் மோதும் வில்லனாக அர்னால்டு நடிப்பார் என ரசிகர்கள் மிகப்பெரிய கனவுடன் இருந்தார்கள்.. இதற்கான எதிர்பார்ப்பு ‘ஐ’ பட விழாவில் அர்னால்டு கலந்துகொண்டபோது இருந்தே ஆரம்பித்துவிட்டது. ஆனால் இப்போது அர்னால்டு நடிக்க முடியாமல் போய், அவருக்கு பதிலாக உள்ளூர் அர்னால்டான பாலிவுட் நடிகர் அக்சய் குமார் நடிக்கிறார்.

அர்னால்டு நடிக்க முடியாமல் போனதற்கு அவர் 1௦௦ கோடி ரூபாய் சம்பளம் கேட்டார், அது கட்டுபாடியாகவிலை என்று தானே சொல்லப்பட்டது.. ஆனால் காரணம் அது இல்லையாம். அர்னால்ட் நடிப்பதாக அனேகமாக உறுதியாகி இருந்தது. இறுதிநேரம் வரை முயன்றும் அதில் உள்ள சர்வதேச நிதிச்சட்டச் சிக்கல்களால் நடக்கமுடியாமல் போயிற்று என கூறியுள்ளார் படத்தின் வசனகர்த்தாவான எழுத்தாளர் ஜெயமோகன்.