உருவாகிறது கோலிவுட்டின் புதிய கோக்குமாக்கு கூட்டணி..!


யாரும் எதிர்பாராத விதமாக செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார் என்கிற செய்தி கசிந்துள்ளதால் ஷாக்காகி கிடக்கிறார்கள் ரசிகர்கள்.. ஒருவகையில் இது இன்ப அதிர்ச்சி தான்.. பின்னே இரண்டு இயக்குனர்களும் தங்களது படங்களில் ரொமான்ஸ் காட்சிகளில் எப்படி புகுந்து விளையாடுவார்கள் என்பது தான் ஊருக்கே தெரியுமே..

அப்படியானால் செல்வராகவன் சிம்புவை வைத்து இயக்கிய ‘கான்’ படம் அவ்வளவுதானா என கேட்டால், ஏற்கனவே அரைமனதாக அந்த படத்தை ஏறக்கட்டி வைத்திருந்தாராம் செல்வா. இப்போது சிம்புவின் ‘பீப் ஷாங்’ ஹிட்டடித்து (!?) பட்டையை கிளப்ப அவர் ரேஞ்சுக்கு தான் ஒர்த் இல்லையென முழுவதுமாக கிடப்பில் போட்டுவிட்டு இப்போது எஸ்.ஜே.சூர்யா பக்கம் தாவிவிட்டாராம் செல்வா. ஆக கோலிவுட்டில் ஒரு புதிய கோக்குமாக்கு கூட்டணி தயார்.