அரசு பஸ் ட்ரைவரை தாக்கியதாக மித்ரா குரியன் மீது வழக்கு..!


தமிழில் காவலன் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தவர் மலையாள நடிகை மித்ரா குரியன்.. ஏராளமான மலையாள படங்களில் நடித்த மித்ரா குரியன் கேரளாவை சேர்ந்த கீ போர்டு இசை கலைஞரான வில்லியம் ஃப்ரான்சிஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினர்.. இத்தனை நாட்கள் செய்திகளில் அடிபடாமல் இருந்த மித்ரா குரியன், நேற்று முன்தினம் கேரளா அரசு பேருந்து ஓட்டுனர் ஒருவரையும் போக்குவரத்து காவலர் ஒருவரையும் தாக்கியதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளார்.

என்ன ஒரு பெண், அதுவும் ஒரு நடிகை இரண்டு ஆட்களை தாக்கினாரா..? அப்படி என்னதான் நடந்தது..? கேரளா மாநிலம் பெரும்பாவூர் பஸ் நிலையத்திற்குள் தனது காரை ஓட்டிக்கொண்டு நுழைந்திருக்கிறார் மித்ரா குரியன். ஆனால் அங்கே பிற வாகனங்கள் நுழையக்கூடாது என்பதால், போக்குவரத்து காவலர் அவரை எச்சரித்திருக்கிறார்.. அவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை அடித்துவிட்டாராம் மீத்ரா குரியன்.

கோபமாக காரை எடுத்துக்கொண்டு வெளியேற நினைக்கையில் அவரது கார் மீது, பஸ் ஸ்டாண்டில் இருந்து கிளம்பிய கேரள அரசு பேருந்து ஒன்று உரசியது.. அத்துடன் நிற்காமல் வேறு செல்ல, ஏற்கனவே டென்ஷனில் இருந்த மித்ரா குரியன் பச்சை விரட்டிச்சென்று நிறுத்தி ட்ரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். அத்துடன் அவரை தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து போக்குவரத்து காவலரும் பஸ் ட்ரைவரும் போலீஸ் ஸ்டேஷனில் மித்ரா குரியன் மீது புகார் கொடுத்துள்ளார்களாம். அவர்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாம்.
நடிகைதான் என்றாலும், ஒரு பெண் போது இடத்தில் இரண்டு ஆண்களை அதிலும், அரசு ஊழியர்களை தாக்கினார் என்பதும், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்கள் என்பதும் நம்பும்படியாகவா இருக்கிறது..? அதனால் போலீஸார் இந்த விவகாரத்தில் உண்மையில் நடந்தது என்ன என விசாரித்து வருகின்றனராம்..