‘மான் காராத்தே’ இயக்குனர் செய்யவேண்டியதை தீர்மானிப்பது ஏ.ஆர்.முருகதாஸ் தானாம்..!


இயக்குனர் திருக்குமரன் சிவகார்த்திகேயனை வைத்து ‘மான் கராத்தே’ மற்றும் உதயநிதி ஸ்டாலினை வைத்து ‘கெத்து’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது தன்னுடைய அடுத்த படத்துக்குத் தயாராகிவிட்டார். பொதுவாகவே திருக்குமரன், ஒவ்வொரு முறை தான் எழுதிய கதையை தன்னுடைய குருநாதர் ஏ.ஆர்.முருகதாஸிடம் சொல்வாராம்.

முழுக்கதையையும் கேட்கும் முருகதாஸ் யாரைச் சொல்கிறாரோ, அவர்தான் அந்தப் படத்துக்கு ஹீரோ. உதயநிதி ஸ்டாலினையும், சிவகார்த்திகேயனையும் அப்படித்தான் செலக்ட் செய்தாராம் திருக்குமரன். தற்போது, விஜய் சேதுபதியைக் கைகாட்டியிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். அவரிடம் கதை சொன்ன திருக்குமரன், விஜய் சேதுபதியின் சம்மதத்திற்காக காத்திருக்கிறாராம்.. இது என்னடா புது சிஸ்டமா இருக்குது..?