அறிந்தும் அறியாமலும் செய்த தவறை அஜித் பொறுத்துக்கொள்வாரா..?

அஜித்தை இயக்குகிறார்.. ஆர்யாவை இயக்குகிறார்.. ஆனால் தன் தம்பி கிருஷ்ணாவை மட்டும் தனது கிட்டத்தில் கூட சேர்க்க மாட்டேன் என்கிறாரே இந்த விஷ்ணுவர்தன் என்று கடந்த பத்து வருடங்களாக ரசிகர்களிடமும், திரையுலகினரிடமும் ஒரு சந்தேகத்திற்கு பதில் கிடைக்காமல் இருந்து வந்தது..

எதற்குடா இப்படி ஒரு வம்பு பேச்சு… ஒரு படத்தை இயக்கித்தான் பார்ப்போமே என ‘யட்சன்’ மூலம் விஷப்பரீட்சையில் இறங்கினார் விஷ்ணுவர்தன். இருந்தாலும் துணைக்கு ஒரு பலசாலி இருந்தால் நன்றாக இருக்குமே என ஆர்யாவையும் கூட்டு சேர்த்துக்கொண்டார். ஆனால் தம்பியின் ராசியோ என்னமோ, தவளையுடன் நட்பு வைத்த எலியின் கதையாக ஆர்யாவுக்கும் பிளாப் லிஸ்ட்டில் இன்னொரு படமாக அது மாறிவிட்டது..

இத்தனை நாளா தம்பியை வைத்து இயக்காமல் இருந்ததது ஏன் என்கிற ரசிகர்களின் சந்தேகத்துக்கு இப்போது பயங்கரமான விடை கிடைத்துள்ளது. ஆனால் இப்போது அண்ணனுக்கு புதிதாக ஒரு சிக்கல் முளைத்துள்ளது. என்னவென்றால் அஜித் படத்தை இயக்கப்போகும் இயக்குனர்களின் லிஸ்ட்டில் அடுத்ததாக இவர் பெயர்தான் இருந்தது.

ஆனால் யட்சனின் தோல்வியால் இப்போது அது கேள்விக்குறியாகியுள்ளதாக தெரிகிறது.. அதுமட்டுமல்ல, ஒரு காலத்தில் அஜித்துக்கு ஏற்ற ஸ்டைலிஷான இயக்குனர் என்றால் அது விஷ்ணுவர்தன் தான் என பாராட்டு பத்திரம் வாசித்த ‘அஜித்’ ரசிகர்கள் இப்போது, அண்ணே எங்க ‘தல’யை விட்டுடுங்கண்ணே என சோஷியல் மீடியாவில் கெஞ்சுகிறார்களாம்.

அட கண்றாவியே.. ஏண்ணே உங்களுக்கா இந்த நிலைமை..? என வடிவேலு பாணியில் சில ரசிகர்கள் ஆறுதல் வார்த்தைகளும் கூறிவருகிறார்களாம்.