“வரி கட்டமாட்டேன்” ; அமலாபால் அடாவடி..!


சமீபத்தில் புதுச்சேரியில் நடிகை அமலாபால் புதிய கார் ஒன்றை வாங்கியதன் மூலம், கேரள அரசிடம் வரி ஏய்ப்பு செய்த விஷயம் சர்ச்சையை கிளப்பியது.. இதை தொடர்ந்து இதேபோல நடிகர்கள் பஹத் பாசில், சுரேஷ்கோபி உள்ளிட்ட சிலரும் இதேபோன்ற புதுச்சேரியில் கார்வாங்கியதன் மூலம் வரி ஏய்ப்பு செய்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து பதில் சொல்லும்போது தான் முறையாக வரி கட்டி வருவதாகவும் இந்திய குடிமகனாக தனக்கு இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் சொத்து வாங்குவதற்கு உரிமையுள்ளது என்றும் விளக்கம் அளித்தார் அமலாபால். அமலாபால் உட்பட, இதேபோல வரி ஏய்ப்பு செய்தவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்நிலையில் பஹத் பாசில் தான் உரிய வரியை செலுத்துவதாக கூறியுள்ளாராம். ஆனால் அமலாபாலோ, தான் கேரளாவில் வரிகட்ட போவதில்லை என சம்பந்தப்பட்ட துறைக்கு பதில் அனுப்பியுள்ளாராம்.. புதுச்சேரியில் அவர் வசிப்பதாக காட்டிக்கொள்ள போடப்பட்ட வாடகை ஒப்பந்தம் கூட போலியானது என்று தெரியவந்ததும் இங்கே கவனிக்கத்தக்கது.