அடுத்த படம் குறித்து ஜனவரியில் அறிவிப்பு – வடிவேலு


தமிழ்த்திரையுலகில் அசைக்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் வடிவேலு. இவருக்கு வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரும் ரசிகர்களாக உள்ளனர்.

இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க அவர் மறுத்ததால் இயக்குனர் ஷங்கர் அளித்த புகாரின் பேரில் வடிவேலுவை புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது.

இதனால் சில வருடங்களாக படங்களில் வடிவேலு நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் கமலின் தலைவன் இருக்கிறான் படத்தில் வடிவேலு நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் கமல் அரசியல் பணிகளில் ஈடுபட்டுள்ளதாலும், இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தின் நடித்து வருவதாலும் தலைவன் இருக்கிறான் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை.

இந்நிலையில் வடிவேலு வெப் தொடர்களில் நடிக்க உள்ளதாக சில தினங்களுக்கு முன் சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது. இந்நிலையில் நடிகர் வடிவேலு அதை மறுத்துள்ளார். அவர் கூறியதாவது
வெப்தொடர்கள் எதிலும் நான் நடிக்கவில்லை. ஆனால் படம் குறித்த அறிவிப்பு ஜனவரி மாதத்தில வெளியாகும் என்றார்.