அமலாபாலை பார்த்து மனம் மாறிய ‘அறம் நடிகை..!


சமீபத்தில் வெளியான ‘அறம்’ படத்தில் யதார்த்த கிராமத்து பெண்மணியாக, இரண்டு குழந்தைகளுக்கு தாயாக படம் முழுதும் தனது பரிதவிப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சுனுலட்சுமி.. கேரளாவை சேர்ந்த இவர், தமிழில் செங்காத்து பூமியிலே, டூரிங் டாக்கீஸ் ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் ‘அறம்’ படம் தான் இவர் மீது வெளிச்சம் பாய்ச்சியுள்ளது.

இந்தப்படத்திற்கான வாய்ப்பு வந்தபோது, அம்மாவாக நடிக்காதே என்று சிலர் பயமுறுத்தினார்களாம். எப்படி இந்த கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்டாய் என படப்பிடிப்பின்போது நயன்தாரா கூட இவரிடம் கேட்டாராம்.. ஆனால் சுனுலட்சுமியின் அம்மாதான், “அமலாபாலை பார்.. இந்த வயதில் 15 வயது பெண்ணுக்கு அம்மாவாக நடிக்கிறார்.. இப்போதைய சூழலில் கதையும் கேரக்டரும் தான் முக்கியம்” என்று உற்சாகம் கொடுத்து சம்மதிக்க வைத்தாராம்.