‘நிமிர்ந்து நில்’ படத்தில் இருந்து சில காட்சிகளை ‘கணிதன்’ படத்துக்காக உருவினார்களா..?


ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராக இருந்த சந்தோஷ் தற்போது தாணுவின் தயாரிப்பில் அதர்வா, கேதரின் தெரசா நடிக்கும் ‘கணிதன்’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்தில் “போலிச்சான்றிதழ் தயாரிக்கும் கும்பல் அதை எப்படிச் செய்கிறார்கள் என்பதையும் தெளிவாக காட்டியிருக்கிறேன். இதுவரை யாரும் இந்த விஷயத்தை இத்தனை தெளிவாக சொன்னதில்லை என்று நினைக்கிறேன்” என கூறியுள்ளார்.

ஆனால் நிமிர்ந்து நில் படத்தில் சொத்து பத்திரம், சான்றிதழ் என அனைத்துக்குமே போலிகளை தயாரிக்கும் ஒரு கும்பல் எந்த இடத்தில் எப்படி செயல்படுகிறது அவற்றை எப்படி தயாரிக்கிறது என விளக்கமாக காட்சிப்படுத்தியிருப்பார் சமுத்திரக்கனி.

ஆக தனது படத்திலும் போலிச்சான்றிதழ் தயாரிப்பு சம்பந்தப்பட்ட காட்சிகளை நிமிர்ந்து நில் படத்தில் இருந்து சுட்டு விட்டார்களா..? இல்லை புதுசா ஏதாவது பண்ணியிருக்கிறார்களா என தெரிந்துகொள்ளவேண்டுமானால் படம் வரும்வரை கொஞ்ச நாள் காத்திருக்கத்தான் வேண்டும்..