இதற்காகத்தான் நாயரை கூடவே வைத்திருக்கிறாராம் ‘சைத்தான்’ நாயகி…!

தமிழ் நாட்டை சேர்ந்த சினிமா பிரபலங்கள் யாரும் தங்களது ஜாதி பெயரை தங்கள் பெயருடன் இணைத்துக்கொண்டதாய் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை. பெரும்பாலும் கேராளாவில் இருந்து வரும் நபர்கள் தான் தங்களது பெயருடன் தங்களது ஜாதிப்பெயரான நாயரையோ, மேனனனையோ இணைத்துக்கொண்டு வருகிறார்கள்.

அந்தவகையில் மரியான் பார்வதியை பாராட்ட வேண்டும். முதலில் பார்வதி மேனன் என்கிற பெயரில் அறிமுகமானாலும் நாளடைவில் ஜாதி தேவையில்லை என்பதை புரிந்துகொண்டு தன்னை வெறும் ‘பார்வதி’ என்று அழைத்தாலே போதும் என சொல்லிவிட்டார்.

ஆனால் தற்போது சைத்தான் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள அருந்ததி நாயர் தனது பெயருக்குப்பின் நாயர் என்பதை சேர்த்து கொண்டதற்கு வித்தியாசமான காரணம் ஒன்றை கூறியுள்ளார். கேரளாவில் பெயருக்கு முன்னால் ஊர் பெயரையும், பெயருக்கு பின்னால் ஜாதி பெயரையும் குறிப்பிடுவது வழக்கம். இதனை கேரளாவில் ஜாதி அடையாளமாக பார்க்க மாட்டார்கள் குடும்ப அடையாளமாகத்தான் பார்ப்பார்கள்” என்கிறார்.

இருந்தாலும் தனக்கு ஜாதி பெயரை போட்டுக் கொள்வதில் விருப்பம் இல்லை என்கிற அருந்ததி, “கேரளாவில் என்னை தவிர அருந்ததி என்கிற பெயரில் வேறு சில நடிகைகளும் இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் இருக்கிறார்கள். எனவே என்னை அடையாளப்படுத்திக் கொள்ளத்தான் நாயர் அடைமொழியை சேர்த்திருக்கிறேன்” என்கிறார்.