அட்லிக்கு தண்டனை கொடுங்கள் ; சீறிய தயாரிப்பாளர்


இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக பணியாற்றியவர் இயக்குனர் அட்லி. இவர் இயக்கத்தில் வெளியான ‘ராஜா ராணி’, உட்பட ‘தெறி’, ‘மெர்சல்’ மூன்று படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றதாக சொல்லப்படுகின்றன. அதனால் தற்போது இவர் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக மாறிவிட்டார் ஆனால் இவரை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர்களோ நட்டத்தில் சிக்கி கதறுகிறார்கள்.

காரணம் அட்லி ஆரம்பத்தில் சொல்லுகின்ற பட்ஜெட் ஒன்றாக இருக்கிறது. படத்திற்கு இழுத்துவிடும் செலவு அதைவிட அதிகமாக இருக்கிறதாம்.. ‘மெர்சல்’ படம் நன்றாக ஓடியும்கூட, படத்தை தயாரித்த தேனாண்டாள் பிலிம்ஸ் முக்காடு போடாத குறைதான். அட்லியின் உயரம் தான் குறைவே சம்பளம் எல்லாம் மூன்று பனைமர உயரத்திற்கு கேட்கிறாராம்.. புதிதாக வரும் தயாரிப்பாளர்களிடம் தற்போது சம்பளமாக 15 கோடி கேட்கிறாராம். இதனால் அவர் மீது பல தயாரிப்பாளர்கள் கோபத்தில் இருக்கின்றனர்.

இந்நிலையில் அம்மா கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர் டி.சிவா அளித்த ஒரு பேட்டியில் இயக்குனர் அட்லியைப் பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார். “இயக்குனர் அட்லிக்கு எந்த தயாரிப்பாளரும் படம் கொடுக்க கூடாது. எந்த ஹீரோவும் அவர் படத்தில் நடிக்கக்கூடாது அவர் படம் இல்லாமல் திண்டாட வேண்டும்.. ஒரு தயாரிப்பாளரின் வலி என்னவென்று அவருக்கு உணர்த்த வேண்டும். அதற்கு அந்த கடுமையான தண்டனை அவர் அனுபவிக்கணும்“ என்றார் தயாரிப்பாளர் டி.சிவா.