சிம்புவை கலாய்க்கும் விதமாக ‘பீபீ’ சாங் வெளியிட்ட பார்த்திபன்..!


சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது, அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பார்த்திபன் நிவாரண உதவிகளை வழங்கினார். தற்போது சென்னை மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் பார்த்திபன், ‘த்துதா மிகித லகுதா’ என்ற பீபீ பாடல் ஒன்றை எழுதி யூடியூபில் வெளியிட்டுள்ளார்.

சிம்புவின் பீப் பாடல் தெரியும்.. அதென்ன பீபீ பாடல்..? மழை வெள்ளத்தில் இருந்து சென்னையும் மீண்டும் பழைய நிலைமைக்கு வரலாமே என்று ஒரு பாடல் பண்ணலாம் என பார்த்திபனுக்கு தோன்றியதாம். அதனால் தற்போது ‘பீப்’ பாடல் தமிழகத்தில் பரபரப்பாக இருப்பதால் இப்பாடலை ‘பீ பீ’ என்று தொடங்குவது போல எழுதினேன் என்கிறார் பார்த்திபன்.. சிம்புவை கலாய்த்தது போலவும் ஆச்சு.. தனது பாடலுக்கு பப்ளிசிட்டி செய்தமாதிரியும் ஆச்சு..