வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வன்மம் காட்ட தவறாத சேரன் – ராதிகா..!


வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் விஷால் மீது தங்களுக்குள்ள வன்மத்தை காட்ட தவறாமல் வெளிப்படுத்தி வருகிறார்கள் நடிகை ராதிகாவும் இயக்குனர் சேரனும்.. ராதிகாவுக்கு விஷால் தனது கணவரை தோற்கடித்துவிட்ட ஆத்திரம் இப்போதும் இருக்கிறது. சேரனுக்கோ விஷால் தனக்கு படம் இயக்கம் வாய்ப்பு தருவதாக சொல்லி ஏமாற்றிய கோபம் இன்னும் தீரவில்லை.

இவர்களின் கோபம் சமீபத்திலும் வெளிப்படவே செய்துள்ளது. தயாரிப்பாளர் சங்கத்தின் 10-வது பொதுக்குழு கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டதால் பாதியிலேயே முடிக்கப்பட்டது அல்லவா.? ஆர்.கே.நகரில் விஷால் சுயேட்சையாக போட்டியிட மனுதாக்கல் செய்ததே இந்த சலசலப்புக்கு காரணம் என்று பலர் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த சலசலப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வேதனை தெரிவித்திருந்தார். அதனைக் குறிப்பிட்டு ராதிகா சரத்குமார் “கெடுவான் கேடு நினைப்பான்” என்று தெரிவித்திருக்கிறார். மேலும், “பிரச்சினை என்றால் அவர்கள் அலுவலகத்திற்கு வரவேண்டுமே தவிர ஊடகங்களுக்கு போகக் கூடாது என்று தலைவர் கூறுவது காமெடியாக உள்ளது. அவருக்கு மரியாதையோ நெறிமுறையோ ஒன்றும் தெரியாது” என்றும் தெரிவித்திருக்கிறார் ராதிகா சரத்குமார்.

இன்னொரு பக்கம் இயக்குநர் சேரன் தொடர்ச்சியாக விஷாலின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறிவந்தார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் சேரன் கூறியிருப்பதாவது: “நான் இன்று தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் பேசவே இல்லை. விஷாலை கேள்வி கேட்டவர் எல்லாம் அவருக்கு வாக்களித்து ஏமாந்து நிற்கும் தயாரிப்பாளர்கள். 450 பேர்களை சமாளிக்க தைரியமும், விளக்கம் கொடுக்க பொறுமையும் இல்லாமல் எஸ்கேப் ஆக தேசிய கீதம் பாடிய ஒரே தலைவன் விஷால் தான். இதைவிட கரும்புள்ளி இனி ஏது?” என கடுமையாக சாடியிருக்கிறார் சேரன்.