தூர்தர்ஷனில் நகைச்சுவைத் தொடர் ‘வாழ்வே தாயம்’

சென்னை தொலைக்காட்சி துவங்கப் பட்டு சுமார் நாற்பது ஆண்டுகள் ஆகிறது. அதனால் சென்னைத் தொலைக்காட்சியில் இதுவரை மெகாத் தொடர் எதுவும் தயாரிக்கப் பட்டதில்லை..13 வாரத் தொடர், அதுவும் வார விடுமுறை நாட்களில் மட்டுமே ஒலிபரப்பப் பட்டு வந்திருக்கிறது.

முதன் முறையாக “வாழ்வே தாயம்” என்ற மெகாத் தொடரை சென்னை தொலைக்காட்சி தயாரித்து வழங்க உள்ளது.

ஜூன் 2 ஆம் தேதி முதல் – திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணி முதல் 9 மணி வரைத் தொடர் ஒளிபரப்பாகிறது.

“வாழ்வே தாயம்” நகைச்சுவைத் தொடரில் மதன்பாப், பாண்டு,நித்யா, காத்தாடி ராமமூர்த்தி, ஷோபனா, சத்யஜித், கிரீஸ், நிஷா, சித்ரா, கீர்த்தி சுந்தர், கார்த்திக், பாபி,ஆகியோர் நடிக்கிறார்கள்.

காதல் மதியின் பாடல் வரிகளுக்கு இசை ஜான்பீட்டர்.

இந்தத் தொடரை எழுதி இயக்குபவர் ரதீஸ் ..இவர் முன்னாள் செய்தி வாசிப்பாளர் ஷோபனா ரவியின் சகோதரர்.

ரதீஸ் ஏற்கெனவே பல தொடர்களை சென்னைத் தொலைக்காட்சிக்காக எழுதி இயக்கி இருக்கிறார். அத்தனை தொடர்களுமே தேசியவிருதுகளை பெற்றிருக்கிறது.

அகில இந்திய அளவில் தூர்தர்ஷனில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக இவரது தொடர்கள் தேசிய விருது பெற்றுருக்கிறது.

இவர் விரைவில் பிரபல நட்சத்திரங்களை வைத்து திரைப்படம் ஒன்றை இயக்க இருக்கிறார்.