யுவன் வர்றதே பெரிய விஷயம் ; அவரை இப்படி அவமானப்படுத்தலாமா..?


யுவன் சங்கர் ராஜா பொதுவாக சினிமா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதே அரிதான விஷயம்.. அந்தவகையில் தான் இசையமைத்த படங்களின் விழாக்களுக்கு கூட அவர் வருவது இல்லை.. அப்படி ஏதாவது வந்தார் என்றால் அந்தப்படம் தனக்கு மிக நெருங்கிய நண்பரின் படமாகத்தான் இருக்கும்..

இன்று நடைபெற்ற ‘யாக்கை’ பட இசைவெளியீட்டு விழாவுக்கு யுவன் வந்தார் என்றால் அது படத்தின் ஹீரோ கிருஷ்ணாவுக்காத்தான்.. ஆனால் விழாவை தொகுத்து வழங்கிய அஞ்சனா தனது கவனக்குறைவால், அலட்சியமான போக்கால் யுவனை அவமானப்படுத்தி விட்டார்.

கிட்டத்தட்ட இருபது பேர் வரை மேடைக்கு அழைத்தவர், யுவனை மேடைக்கு அழைக்காமல் விட்டுவிட்டார்.. பலரும் யுவன் வரவில்லையோ என்றுதான் நினைத்தார்கள்.. ஆனால் மேடையில் அமர்ந்திருந்த இயக்குனர் விஷ்ணுவர்தன் ‘யுவனை கூப்பிடலையா’ என கேட்டதும் தான் தொகுப்பாளினிக்கு தனது தவறு புரிந்தது.. பின்னர் யுவனிடம் மன்னிப்பு கேட்டுகொண்டு அவரை மேடைக்கு அழைத்தார்.

அஞ்சனாவின் இந்த செயல் விழாவுக்கு வந்திருந்த பலரையும் முகம் சுளிக்க வைத்தது.