“கொஞ்ச நாளைக்கு அடக்கி வாசி” ; எமி ஜாக்சனை கண்டித்த ஷங்கர்..!


தமிழ்சினிமாவில் அவ்வப்போது நடக்கும் ஆச்சர்யங்களும் அதிசயங்களும் சொல்லி மாளாது… எந்த கணக்கில் எமி ஜாக்சனை எல்லோரும் ‘தெய்வத்திருமகளாகவே’ இன்னும் தாங்கு தாங்கென்று தாங்குகிறார்கள் என்பது இன்றுவரை புரியாத புதிர்தான்.. ஷங்கர் படத்தில் ஒருத்தர் கதாநாயகியாக நடித்துவிட்டால் அதன்பின் இண்டஸ்ட்ரியில் அவர்கள் ஆட்டும் ஆட்டம் இருக்கிறதே.. அப்பப்பா..

அது முத்தின கத்திரிக்காயாக இருந்தாலும் நம்ம ஆட்களும் ஷங்கர் பட ஹீரோயின் என அவர்களுக்கு தேவையில்லாத பில்டப்பை கொடுத்து உச்சாணிக்கொம்பில் ஏற்றிவைத்து விடுகிறார்கள்.. அப்படி ஆட்டம் போட்டு அதோ கதியான சதா, ஸ்ரேயாவின் இன்றைய நிலையையும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்..

இப்போது எமி ஜாக்சனின் முறை.. விக்ரம் ஜோடியாக ஷங்கரின் படத்தில் நடித்ததால் தனக்கு புது பவிசு ஏற்பட்டதாக அவரே நினைத்துக்கொண்டாரா, இல்லை நம்மவர்கள் வழக்கம்போல ஏற்ரிவிட்டார்களா தெரியவில்லை.. ஆனால் உதயநிதியின் ‘கெத்து’ படத்தில் அவரின் நடிப்பு கழுவி ஊற்றும்படியாகத்தான் இருந்தது..

இந்த நிலையில் மீண்டும் ஷங்கர் டைரக்சனில் அதுவும் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பதால் அம்மணியின் ஆட்டம் இன்னும் அதிகமாகிவிட்டதாம்.. எந்த அளவுக்கு என்றால் ஷூட்டிங் இல்லாத சமயத்தில் பாய்பிரண்டுகளுடன் டேட்டிங், பார்ட்டி என் சுற்றுவதும் அந்த புகைப்படங்களை, வீடியோக்களை பரப்பி விடுவதும் என அட்ராசிடி பண்ணுகிறார் எமியம்மா..

இது தனது படத்தில் எமி ஜாக்சன் நடித்துவரும் கேரக்டரின் கண்ணியத்தை குறைத்துவிடும் என்பதை அறிந்து டென்சனான ஷங்கர், எமியை அழைத்து, “படம் முடியும் வரை, உன் சேட்டையெல்லாம் கொஞ்சநாளைக்கு மூட்டைகட்டி வை” என் கண்டித்துள்ளாராம். ‘ஐ’ படத்தில் தன்னிடம் அன்பாக நடந்துகொண்ட இயக்குனரா தன் மீது இப்படி கோபப்படுகிறார் என்கிற அதிர்ச்சியில் இருந்து இன்னும் எமியம்மாவால் விடுபட முடியவில்லையாம்.