அஜித்தால் பாதிக்கப்பட்ட தனுஷ் பட இயக்குனர்


அஜித் தற்போது விஸ்வாசம் என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இதற்கு முன்பு இந்த நிறுவனம் தயாரித்திருந்த ‘தொடரி’ படம் தோல்வியை தழுவியது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்

அதை ஈடுகட்டும் விதமாக அந்த படத்தில் நடித்த நாயகன் தனுஷ் அதே நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு படம் நடித்து தருவதாக வாக்கு கொடுத்திருந்தார். அந்த படத்தை, தனுஷை வைத்து கொடி என்கிற ஹிட் படத்தை கொடுத்த எதிர்நீச்சல் இயக்குனர் செந்தில்குமார் இயக்குவதாக இருந்தது. அதை தயாரிக்க ஆரம்பிக்கும் நேரத்தில் தான் அஜித்தின் விஸ்வாசம் படம் அறிவிக்கப்பட்டு அதன் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதனால் தனுஷ், துறை செந்தில்குமார் படம் ஒத்திவைக்கப்பட்டது.. தனுஷ் வெவ்வேறு படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.. ஆனால் துரை செந்தில்குமார் வேறு படத்திற்கு செல்லமுடியாமல் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக சும்மாவே இருக்கிறார் மீண்டும் இதே கூட்டணி சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்குத்தான் படம் பண்ண இருக்கிறார்கள்.. என்றாலும் இந்த ஒன்றரை வருடம் அஜித்தால் துறை செந்தில்குமாரின் திரையுலக பயணம் தடைபட்டது பட்டது தான்.. அஜித் இப்படி செய்யலாமா என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.