அக்கா மாதிரி இருப்பாரே.. அவரா ஜோடியா நடிக்கிறார்..? ; தனுஷின் டெரர் முடிவு..!

தனுஷ் அடுத்ததாக போலீஸ் யூனிபார்ம் படத்தை இயக்கிய இயக்குனரின் படத்தில் நடிக்க இருக்கிறார் அல்லவா…? இந்தப்படத்தில் இவர் இரட்டை வேடத்தில் நடிக்கிறாராம். இதில் அண்ணனுக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட்டின் கனவுக்கன்னியாக இருந்து, கடந்த வருடம் தான் திருமணம் செய்துகொண்ட ஒரு சேச்சியை நடிக்க பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்களாம்.

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து பாலிவுட்டில் உருவாகிய ஒரு படத்தில் நடித்த அந்த நாயகி, தனுஷை விட ஆறு வயது மூத்தவர்.. அந்த நடிகை நடித்தால் நன்றாகத்தான் இருக்கும்.. ஆனால் என்னதான் அண்ணன் கேரக்டருக்கு ஜோடி என்றாலும் இவருக்கு அக்கா மாதிரியல்லவா தெரிவார் என இப்போதே ஜெர்க் ஆகிறார்கள் ரசிகர்கள்.

கேரள மாநிலம் பாலக்கட்டை சொந்த ஊராக கொண்டவர் தான் இந்த பாலிவுட் நடிகையான வித்யா பாலன்.. தமிழில் பத்து வருஷங்களுக்கு முன்னாடி மனசெல்லாம்னு ஒரு படம் வந்துச்சே.. இப்போ சௌகார்பேட்டை நடிகரும், மூணுஷாவும் நடிச்ச அந்தப்படத்துல முதல்ல மூணுஷாவுக்கு பதிலா ஒப்பந்தமானவங்கதான் இந்த சேச்சி.

ஆனா ஷூட்டிங் டைம்ல ஒரு சின்ன விபத்து ஏற்பட, செண்டிமெண்ட் காரணமா படத்துல இருந்தே அம்மணியை தூக்கிட்டாங்க. இங்கே தமிழில் அவரை கண்டுக்க ஆளில்லை.. அதனால இனி தமிழ்ப்படங்களில் நடிக்கமாட்டேன்னு பாலிவுட்டில் அடியெடுத்து வைத்தார். அதிர்ஷ்ட தேவதை அவரை அங்கேயே பிடிச்சு வச்சுக்கிட, இந்தி சினிமாவின் கனவுக்கன்னியாக வலம் வந்து ரசிகர்களை கிறங்கடித்தார்.

ஆனாலும் தன்னை புறக்கணித்த மலையாளம், தமிழ் இரண்டிலும் இருந்து வந்த வாய்ப்புகளை தயவு தாட்சண்யம் பார்க்காமல் நிராகரித்தார். ஆனால் விஷயம் என்னவென்றால், அப்படிப்பட்ட வைராக்கியம் உள்ள நடிகையை இங்கே தமிழில் நடிக்கவைத்துவிடவேண்டும் என்றும் அவருக்கு ஜோடியாக நடித்த ஒரே தமிழ்நடிகர் என்கிற வரலாற்று சிறப்பை அடைய வேண்டும் என்றுதான் தான் தனுஷ் தனது படத்தில் நடிக்க அணுகியிருப்பதாக சொல்லப்படுகிறது.. அப்படி அந்த நடிகை ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் அந்தப்படத்தை சுள்ளான் நடிகரே தயாரிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.