அர்னால்டு இல்லேன்னா அக்சய் குமார் ; புதுசா இருக்கணும் அவ்வளவுதான்..!


தலையால் தண்ணி குடித்து பார்த்தார்கள்.. ம்ஹூம்.. ரஜினி படத்தில் நடிக்கிறீர்கள் என்று சொன்னாலும் கூட அர்னால்டு அசைந்து கொடுக்கவே இல்லை.. நூறு கோடி ரூபாய் சம்பளம் தருவதாக கூறியும் கூட அர்னால்டு போட்ட கண்டிசன்களை ஷங்கரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றே தெரிகிறது.

சரி உலக ஆட்டக்க்காரியை விட உள்ளூர் ஆட்டக்காரி தான் சிறந்தவள் என்கிற முடிவுக்கு வந்த ஷங்கர் இப்போது ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் அக்சய் குமாரை அழைத்து வந்து பூஜையை போட்டு படப்பிடிப்பையும் ஆரம்பித்துவிட்டார். படத்தின் பெயர் 2.O. படத்தை லைக்கா நிறுவனம், இந்தியாவிலேயே இதுவரை இல்லாத வகையில் மிக பிரமாண்டமாக தயாரிக்கிறது.