கடைசியில் வழிக்கு வந்தார் நயன்தாரா..!

 

என்வழி தனி வழி என புதிய பாதையில் பயணிப்பவர் நயன்தாரா.. யாரும் அவரை எந்த சங்கமும் அவரை கட்டுப்படுத்த முடியாது.. அவரை தங்களது படங்களில் நடிக்க வைக்க தயாரிப்பளர்களும் இயக்குனர்களும் போட்டி போடுவதால், அவர் போடும் கண்டிசங்களுக்கு எல்லாம் தலையாட்டி விடுகிறார்கள்.. இதனால் அவர் புரமோசன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாதது கூட அவர்களுக்கு பெரிதாக தெரிவதில்லை..

 

சேனல்கள் பக்கம் தலைகாட்டுவதும் இல்லை.. அப்படி அவர் சேனல்களில் தெரிந்தால் அது ஏதாவது முக்கியமான விருது வழங்கும் விழாவாகத்தான் இருக்கும். ஆனால் ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமாக வரும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று சன் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார் நயன்தாரா.

 

தற்போது அறிமுக இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள ‘அறம்’ படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதனால் இந்த விநாயகர் தின சிறப்பு நிகழ்ச்சியில் அறம் படம் பற்றி ரசிகர்களுக்காக பல செய்திகளை பகிர்ந்துகொள்ள இருக்கிறாராம் நயன்தாரா.