“போங்கப்பு…1000 ரூபாய் நோட்டு பேங்குல செல்லும்” ; கௌதம் மேனன் கிண்டல்..!


நீண்ட் நாட்கள் இழுபறிக்குப்பின் கௌதம் மேனன்-சிம்பு கூட்டணியில் உருவான ‘அச்சம் என்பது மடமையடா’ படம் சமீபத்தில் வெளியானது. இந்தப்படம் சமீபகாலங்களில் வந்த சிம்புவின் மற்ற படங்களை விட நன்றாகவே இருக்கிறது என்பது உண்மை.. ஆனால் கிளைமாக்ஸில் திடீரென வரும் ட்விஸ்ட் வெறும் பில்டப்பிற்காக மட்டும் வைக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் பலரும் கருதுகிறார்கள்.. அதை தங்களது விமர்சனம் மூலமாக சொல்லவும் செய்கிறார்கள்.

குறிப்பாக சிம்பு கிளைமாக்ஸில் போலீஸ் அதிகாரியாக வருவது, அதற்கு முன் அவர் அன்டர்கவர் ஆபீசராக வேலைசெய்தார் என்பதெல்லாம் சரியான பூச்சுத்தல் என்றும் விமர்சிக்கிறார்கள் ரசிகர்கள்.. குறிப்பாக கிளைமாக்ஸ் ஆயிரம் ரூபாய் நோட்டைப்போல செல்லாமல் போய்விட்டது என கமென்ட் அடித்திருக்கிறார்கள்.

இந்த தகவல் கௌதம் மேனன் காதுகளுக்கும் வந்தது.. ஆனால் அவரோ, “போங்கப்பு.. படத்தோட கலெக்சன் சூப்பரா இருக்கு.. 1000 ரூபாய் நோட்டு கடைலதான் செல்லாது.. பேங்க்ல செல்லும்” என படம் நன்றாக ஓடுவது குறித்து, கிண்டலுடன் ரசிகர்களுக்கு பதில் அளித்துள்ளார்.