ஹன்ஷிகா விலகிப்போனதை சந்தானம் விழாவில் சொல்லி புலம்பிய சிம்பு…!

ஹன்சிகா.. சிம்புவின் இரண்டாவது முன்னாள் காதலி.. சிம்புவுடன் காதல் முறிவை ஏற்படுத்தி அவரை இரண்டாவது முறையாக தர்ம சங்கப்படுத்தியவர். அதில் சிம்புவுக்கு ஒரு பக்கம் காயம் பட்டிருந்தாலும் எதையும் வெளிக்காட்டாமல் வலம் வந்தார். எங்கே பொது விழாக்களில் கலந்துகொண்டால் கூட ஏதாவது பேசிவிடுவோமோ என பயந்துகொண்டு விழாக்களில் கலந்துகொள்வதையும் தவிர்த்து வந்தார்.

ஆனால் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள ‘இனிமே இப்படித்தான்’ படத்தின் இசைவெளியீட்டு விழாவுக்கு வந்தவர், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த மாதிரி தனது மனதை திறந்து கொட்ட ஆரம்பித்தார். அதில் அவரது காதலியான ஹன்சிகாவையும் மறைமுகமாக குறிப்பிட அவர் தவறவில்லை.

“இந்த ரெண்டு வருஷத்துல கிட்டத்தட்ட எல்லாமே என்னை விட்டு போயிருச்சு.. கஷ்டத்துல கூட நிக்கவேண்டிய, நான் காதலிச்ச பொண்ணு கூட என்ன விட்டு போயிட்டா.. பத்திரிகைல கூட நான் ஆன்மீகவாதி ஆகிட்டேன், இமயமலைக்கு போறேன்னு கூட செய்தி வந்துச்சு.. நான் கடவுளைத்தேடித்தானே போனேன் பிகரை தேடி போகலையே..” என வேதனையை வெளிப்படுத்தினார் சிம்பு.