இதற்கு எப்படி சம்மதித்தார் விக்ரம் பிரபு..?


எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள ‘சத்ரியன்’ படம் வரும் வெள்ளியன்று வெளியாக இருக்கிறது. நடிகை மஞ்சிமா மோகன் நாயகியாக நடித்துள்ளார். சமீபகாலங்களில் எந்த கதாநாயகனும் செய்ய துணியாத ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விஷயம் ஒன்றை இந்தப்படத்தில் முதன்முதலாக செய்துள்ளாராம் விக்ரம் பிரபு.

விஷயம் இதுதான். பொதுவாக ஒரு படத்தில் கதாநாயகன் இறந்ததுபோல் காட்டினால், ரசிகர்கள் அந்தக் காட்சியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அப்படி காட்டினால், அந்தப் படம் 99 சதவீதம் தோல்வியைத்தான் தழுவும் என்பது எழுதப்படாத விதி.. எனவே, அந்தக் காலத்தில் இருந்தே அப்படிக் காட்டுவதை இயக்குனர்கள் தவிர்த்து வந்தனர்.

ஆனால். ‘சத்ரியன்’ படத்தில், நடிகர் விக்ரம்பிரபு க்ளைமாக்ஸில் இறப்பதுபோல காட்டியிருக்கிறார்களாம். வில்லன்களுடன் மோதும் விக்ரம்பிரபுவை கொன்றுவிடுவது போல் காட்சி உள்ளதாம். விக்ரம் பிரபுவின் துணிச்சலான இந்த முடிவைக் கண்டு, படம் பார்த்தவர்கள் ஆச்சரியப்பட்டார்களாம் இதற்கு விக்ரம் பிரபு எப்படி சம்மதித்தார் என்பதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது.