“நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்” ; ஒப்புக்கொண்ட கமல்..!


தற்போது தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து உலக நாயகன் கமல் ஹாசன் டுவிட்டரில் அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகிறார். ஆளும் தரப்பில் உள்ளவர்களோ அவரது கருத்துக்களை பார்த்து செம காண்டில் இருக்கிறார்கள்.. அவர்மீது எந்த விதத்தில் வழக்கு தொடுக்கலாம் என (இல்லாத) மூளையை கசக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.. ஆனால் ரசிகர்களோ அவரை அரசியலுக்கு வருமாறு அழைக்கிறார்கள்.

ஆனால் அவரோ “நான் மிகவும் கோவக்காரன் அரசியலுக்கு வர லாயக்கில்லாதவன். நாட்டுக்கு கோவக்கார அரசியல்வாதிகள் தேவை இல்லை. நிதானமான அரசியல்வாதிகள் தான் தேவை. மக்களும் கோவமாக உள்ளோம்,’ என்று கூறியுள்ளார்..

இதன்மூலம் அரசியலுக்கும் தனக்கும் ஒத்துவராது என்பதை தெளிவுபடுத்தியுள்ள கமல், பார்ப்பதற்கு சாது போல தெரிந்தாலும் தான் மிகப்பெரிய கோபக்காரன் என்பதையும் தெரியப்படுத்தியுள்ளார். எனவே தற்போதைய அரசியல்வாதிகள் கமலிடம் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருங்கள்..