“சோஷியல் மீடியாவுல வச்சு என்னை ஓட்டுறது எனக்கு பிடிக்காது” ; ஜீவா..!


தொடர்ந்து தோல்வி படங்களாக கொடுத்து வரும் ஜீவா, அடுத்த வாரம் வெளியாக இருக்கும் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தை தான் பெரிதும் நம்பிக்கொண்டு இருக்கிறார்.. படம் ஓடுகிறதோ இல்லையோ, அந்த படங்களில் ஜீவா செய்யும் ஏதாவது ஒரு விஷயம் சோஷியல் மீடியா கலாய்ப்பு மன்னர்களுக்கு தீனி போட்டு விடுகிறது..

ஆனால் ஜீவாவுக்கு சோஷியல் மீடியாவில் யாரும் தன்னை கலாய்ப்பது பிடிக்காதாம்.. “என்னை தொடர்பவர்களுக்காக, உண்மையான ரசிகர்களுக்காக என்னை பற்றிய செய்திகளை பகிர்ந்து கொள்வதற்காக தான் நான் சோஷியல் மீடியாவில் இருக்கிறேன்.. என்னை கிண்டலடிக்கிறேன் என்கிற பெயரில் தங்களது மன அழுத்தங்களை சோஷியல் மீடியாவில் கொட்டுபவர்களை எனக்கு பிடிக்காது.. அவர்களை ஒரு பொருட்டாக நினைத்து நான் பதிலளிப்பதும் இல்லை” என கோபமாக கூறுகிறாராம் ஜீவா.