“உங்களுக்கு நல்ல மனைவியா இருப்பேன்” ; பொதுமேடையில் தனுஷிடம் வாக்குறுதி கொடுத்த அமலாபால்..!


ஏற்கனவே அவய்ங்களுக்கும் நமக்கும் வாய்க்கா தகராறு என்று சொல்வதற்கேற்ற மாதிரி.. ஏற்கனவே அமலாபாலால் தனுஷ் குடும்பத்தில் கொஞ்சம் புகைச்சல் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் தான் வட சென்னை படத்தில் இருந்துகூட அமலாபால் நீக்கப்பட்டார். ஆனால் வி.ஐ.பி-2 படத்தில் இரண்டாம் பாகத்திற்கு கன்டினியுட்டி வேண்டும் என்பதால் வேறு வழியின்றி அமலாபாலையே நடிக்க வைத்தார்கள்..

சமீபத்தில் நடைபெற்ற இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் அமலாபால் பேசிய பேச்சு மீண்டும் ஒரு புயலை குழப்பி விடுமோ என்கிற மாதிரி தான் இருந்தது.. அவர் இதை தெரிந்துதான் பேசுகிறாரா, இல்லை தெரியாமல் பேசுகிறாரா என்பதையும் கண்டு பிடிக்க முடியவில்லை..

சரி.. அப்படி என்னதான் பேசினாராம் அமலாபால்..? “வி.ஐ.பி. படத்தில் வாய்ப்பு கொடுத்ததற்காக மட்டும் தனுஷுக்கு என் நன்றியைச் சொல்லவில்லை. வி.ஐ.பி. இரண்டாம் பாகத்தில் வேறு ஹீரோயினை நடிக்க வைப்பதற்காக என்னைக் கொலை பண்ணாமல் விட்டதற்காகத்தான் நன்றி சொல்கிறேன் என்று அமலா பால் கூறினாராம்..

உடனே “மூன்றாவது பாகம் இருக்குல்ல” எனக் கீழே அமர்ந்திருந்த தனுஷ் கமெண்ட் செய்தாராம். அதற்கும் சளைக்காத அமலாபால் “ப்ளீஸ் என்னைக் கொலை பண்ணிடாதீங்க. நான் உங்களுக்கு நல்ல மனைவியா இருப்பேன். உங்களை இனிமே டார்ச்சர் பண்ணாத மனைவியா, நல்லவிதமா நடிக்கிறேன்” என்று பதில் கொடுத்துள்ளாராம்.

ரைட்டு சனியன் சைக்கிள்ல வருது..