‘யானை படுத்துக்கிடந்தா..’ ; கே.வி.ஆனந்தை சுத்தலில் விடும் ஹீரோக்கள்..!


“அட கண்றாவியே.. ஏண்ணே உங்களுக்கான்னே இந்த நிலைமை..?” என ‘கோயில்காளை’ படத்தில் தொழில் செய்து நொடிந்துபோய் கிடக்கும் கவுண்டமணியை பார்த்து வடிவேலு கேட்பாரே, அதேபோலத்தான் இயக்குனர் கே.வி.ஆனந்தின் நிலைமையும் தற்போது இருப்பதாக கோடம்பக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

ஒரு காலத்தில், அயன், கோ படங்களின் வெற்றியை தொடர்ந்து கே.வி.ஆனந்தின் படங்களில் நடிக்க முன்னணி நடிகர்கள் பலரும் ஆர்வமாக இருந்தார்கள்.. இரண்டாம் நிலை நடிகர்களோ எந்த தியாகத்திற்கும் தயாராக இருந்தார்கள்.

ஆனால் மாற்றான் படத்தை தொடர்ந்து தனுஷை வைத்து இயக்கிய ‘அநேகன்’ படமும் சரியாக போகவில்லை என்பதால், முன்பு இவரது படத்தில் நடிக்க க்யூவில் நின்றவர்கள் தெறித்து விட்டனர்.. இப்போது விஜய்சேதுபதியை இவர் அணுகி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது… இதாவது ஒர்க் அவுட் ஆகிறதா என பார்ப்போம்