பாரதிராஜா என் கையை பிடித்து அழுதான்; இளையராஜாவின் சுவாரஸ்ய பேச்சு

ilayaraja_news

தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான்களை தனது இசையின் மூலம் உலகத்திற்கு அடையாளப்படுத்தியவர் இசைஞானி இளையராஜா. அந்த லிஸ்டில் பாரதிராஜா தான் முதலில் இருப்பார். ஆனால் பாரதிராஜாவின் சரித்திரத்தில் முக்கிய படமான சிவாஜி, ராதா நடிப்பில் வெளிவந்த “முதல் மரியாதை” படம் எனக்கு பிடிக்காத படங்களில் ஒன்று என “மேகா” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இளையராஜா கூறினார்.

இதுகுறித்து இசைஞானி கூறியதாவது, முதல் மரியாதை படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு படத்தை இசைஞானியிடம் பின்னணி கொடுத்திருக்கிறார் பாரதிராஜா. படத்தை பார்த்த இளையராஜாவுக்கு முதல் மரியாதை படம் பிடிக்கவில்லை. இதை கவனித்த பாரதிராஜாவுக்கு மனதில் ஒரு வருத்தம் இருந்து கொண்டேயிருந்தது. படம் பிடிக்காமல் போனதால் இளையராஜா சரியாக இசையமைக்க மாட்டோனோ என்று கூட எண்ணியிருக்கலாம்.ஆனால் பின்னணி இசையை முடித்து பாரதிராஜாவுக்கு படத்தை போட்டுக்காட்டிய இளையராஜாவின் கையை பிடித்து உனக்கு பிடிக்காத படத்திற்கு இப்படி ஒரு இசையை கொடுத்திருக்கியே என்று கண்ணீர் சிந்தியிருக்கிறார். இதற்கு பதிலளித்த இளையராஜா, படம் எனக்கு பிடிக்கவில்லை என்பது உண்மைதான் ஆனால் என் சரஸ்வதிக்கு நான் உண்மையாக இருக்க வேண்டும், எனக்கு அனைத்து படங்களுமே ஒன்று தான், அந்த காட்சிகளுக்கு என்ன தேவையென்பதை என் மனம் சொல்கிறதோ அதை இசையாக தருகிறேன், என்னை தர வைக்கிறாள் என் சரஸ்வதி என்று கூறியிருக்கிறார்…