ராஜகுமாரனுக்கு வில்லனாக பரத் ; இதுதான் காலக்கொடுமை என்பதா..?


ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்குனராக அவதாரம் எடுத்தது பரத்தை வைத்து இயக்கிய ‘அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’ படத்தின் மூலம் தான். அதன்பின் ‘கோலிசோடா’வில் மேலே ஏறி பத்து எண்றதுக்குள்ள கீழே சர்ருன்னு இறங்கிட்டார்.. விக்ரமை வச்சு படம் டைரக்ட் பண்ணிக்கிட்டிருப்ப, அடுத்து ரெண்டு மூணு முன்னணி நடிகர்கள் இவர் டைரக்சன்ல நடிக்கலாம்னு ஒரு ஐடியாவுல அப்ளிகேசனோட நின்னாங்க..

படத்தோட ரிசல்ட்டை பார்த்ததும் அப்படியே அப்ளிகேசனை கிழிச்சுப்போட்டுட்டு ஜகா வாங்கிட்டாங்க.. அதனால வேற வழியில்லாம தன்னோட அடுத்த படத்துக்கு டி.ராஜேந்தரை ஹீரோவா புக் பண்ற அளவுக்கு இறங்கி வந்துட்டாராம் விஜய் மில்டன்.. ஆனா என்ன காரணமோ தெரியலை டி.ஆர் நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாராம்.

சரி அவருக்கு ஈக்குவலா அந்த கேரக்டர்ல யாரை நடிக்க வைக்கலாம்னு பார்த்தவர்கிட்ட, தேவயானியோட கணவர் டைரக்டர் ராஜகுமாரன் சிக்கிருக்காரு.. உடனே அவரை ஹீரோ ஆக்கிட்டாரு.. வில்லன் யாரு தெரியுமா..? நம்ம பரத் தானாம்.. தன்னோட முதல் பட ஹீரோங்கிறதால அவரை கைதூக்கி விடுற மாதிரி இந்த வில்லன் வாய்ப்பை கொடுத்திருக்காராம் விஜய் மில்டன்.. ராஜகுமாரன் ஹீரோ.. பரத் வில்லன்.. இதைத்தான் காலக்கொடுமை என்று சொல்வார்களோ..?