ரஜினிக்கு வந்தது நாளை விஜய்க்கும் நேரலாம் ; பயந்துபோய் வழக்கத்தை கைவிட்ட விஜய் ரசிகர்கள்..!


நாளை மறுநாள் விஜய்யின் ‘தெறி’ படம் ரிலீசாக இருப்பதால் ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே விஜய் ரசிகர்கள் தங்களது உற்சாக கொண்டாட்டத்தை தொடங்கிவிட்டார்கள்.. பல தியேட்டர்களில் ஓங்குதாங்கான கட் அவுட்டுகளை வைத்து அந்தவழியாக நடாந்து செல்லும் பொதுமக்களை அண்ணாந்து பார்த்து வாய்பிளக்க செய்து வருகின்றனர்.. அதுவும் நெல்லையில் 140 அடி உயர கட் அவுட்டை வைத்து அசத்தியுள்ளார்கள் விஜய் ரசிகர்கள்..

கட் அவுட் வைத்தால் அடுத்ததாக என்ன..? பாலாபிஷேகம் தானே.. அதை செய்தால் தானே தனது தலைவனுக்கு உரிய மரியாதையை செய்ததுபோல ஆகும் ஒவ்வொரு விஜய் ரசிகனுக்கும்.. ஆனால் விஜய் தரப்பில் இருந்து பாலாபிஷேகத்துக்கு முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

காரணம் இப்படி பாலாபிஷேகம் பண்ணிய விவகாரத்தில் ரஜினிமேல் பெங்களூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருப்பதுதான். அதனால் தேவையில்லாமல் தானும் இதுபோன்ற சர்ச்சை வழக்குகளில் சிக்கவேண்டாம் என நினைக்கிறாராம் விஜய்..