அஜித்துடன் தீரன் இயக்குனர் மீண்டும் இணைவது சந்தேகம்தான்


சதுரங்க வேட்டை என்கிற படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை மட்டுமல்ல, திரையுலகினரின் கவனத்தையும் ஈர்த்தவர் ஹெச்.வினோத். அதன் பலனாக அவருக்கு கார்த்தி நடிக்கும் தீரன் அதிகாரம் ஒன்று என்கிற படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து அவர் அஜீத்தை வைத்து படம் இயக்குவதாக முடிவாகி இருந்தது. இப்போதும் அஜித்தை வைத்து தான் படம் இயக்கி வருகிறார்.. ஆனால் வினோத் தயார் செய்திருந்த கதை அல்ல அது.. பாலிவுட்டில் ஹிட்டான பிங்க் என்கிற படத்தின் ரீமேக் தான்.. ரீமேக் படங்களை இயக்குவதில் உடன்பாடில்லாத வினோத் வேறுவழியின்றி தயாரிப்பாளர் மற்றும் அஜித்திற்காக தனது பிடிவாதத்தை தளர்த்திக் அந்த படத்தை இயக்கி வருகிறார்.

பொதுவாகவே ஒரு இயக்குனரும் ஹீரோவும் தொடர்ந்து படங்களில் பணியாற்ற வேண்டும் என்றால் அவர்களுக்குள் ஒரு கெமிஸ்ட்ரி உருவாக வேண்டும்… அப்படி உருவானதால் தான் இயக்குனர் சிவாவும் அஜித்தும் நான்கு படங்களில் தொடர்ந்து பணிபுரிய முடிந்தது. ஆனால் தற்போது பிங்க் படத்தை இயக்கி வரும் வினோத்திற்கும் அஜித்திற்கும் அந்த அளவிற்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகவில்லை என்று சொல்கிறார்கள்.

இதனால் இந்த படத்தை முடித்ததும் அஜித்தை வைத்து இயக்குவதற்கு ஏற்கனவே திட்டமிட்டிருந்த தனது கதையை அஜித்தை வைத்து வினோத் இயக்குவாரா என்கிற சந்தேகமும் எழுந்துள்ளதாம்.. ஆனால் நாளை எதுவும் நடக்கலாம்.. பார்ப்போம்