கல்யாணம் பண்ணாமலே சேர்ந்து வாழ ஜெய் திட்டம் ; ஒப்புக்கொள்வாரா அஞ்சலி..?


எங்கேயும் எப்போதும்’ படத்தில் நடித்ததில் இருந்து சில வருடங்கள் அஞ்சலி மீதான காதல் ஜுரத்திலேயே இருந்து வந்தார் சிம்புவின் சிஷ்யரான ஜெய்.. ஒருகட்டத்தில் அஞ்சலியுடன் கடலை போடுவது அதிகரிக்க, அப்போது அஞ்சலிக்கு கார்டியனாக இருந்த இயக்குனர், இதில் தலையிட்டு ஜெய்யின் பெரியப்பாவான அந்த இசையமைப்பாளர் மூலம் பைசல் பண்ணி இந்த லவ்வுக்கு தடை போட்டார்..

அதன்பின் அஞ்சலிக்கு பலப்பல பிரச்சனைகள் வந்து நிலைமையை மாறிப்போனது.. இப்போது ஒரு வழியாக தனது கட்ட்யுப்பாடுகளில் இருந்து விலகி சுதந்திர பறவையாக வலம் வருகிறார் அஞ்சலி.. இதில் என்ன ஸ்பெஷல் என்றால், அஞ்சலிக்கும் தனக்கும் நல்ல அன்டர்ஸ்டாண்டிங் இருண்டது என்றும், பிற்காலத்தில் அது காதலாக கூட மாறும் என்றும் சொல்லியிருக்கிறாராம் ஜெய்..

இதில் என்ன பியூட்டி என்றால், கல்யாணம் என்கிற சிஸ்டத்தில் ஜெய்க்கு நம்பிக்கை இல்லையாம். அதனால் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வதில் தான் அவருக்கு நாட்டம் இருக்கிறதாம். அப்படியே அஞ்சலி இவரது வலையில் வீழ்ந்தாலும் திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்துவது ஜெய்யின் திட்டமாம்.