ஜாக்குலினை டிவியை விட்டு வெளியேற வைத்த நயன்தாரா


விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளாராக பணியாற்றி வந்தவர் ஜாக்குலின். சமிபத்தில் இவர் விஜய் டிவியில் இருந்து வெளியேறிவிட்டார் என்று சொல்லப்பட்டது. ஜாக்குலின் வெளியேற காரணம், சில நாட்களுக்கு முன் ஒளிப்பரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஜான் விஜய் தான் என்று செய்திகள் வெளியாகின. …

அதாவது நடிகர் ஜான் விஜய், ஜாக்குலினை தொட்டு ஆடியது அவருக்கு பிடிக்காமல் போனதால் தான் அவர் நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டார் என்றும் கூட பேசப்பட்டது.. ஆனால் அந்த செய்தியில் உண்மை இல்லையாம்.நயன்தாரா தற்போது கதாநாயகியாக நடித்துவரும் ‘கோலமாவு கோகிலா’ படத்தில் ஜாக்குலினும் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம். அந்தப்படத்தில் நடிப்பதற்காகத்தான் அந்த டிவி நிகழ்ச்சியை விட்டு வெளியேறி உள்ளாராம் ஜாக்குலின்.

மேலும் கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுக்கு தங்கையாக நடிக்கிறாராம் ஜாக்குலின்.. நயன்தாராவை பற்றி ஜாக்குலின் கூறும்போது, எப்போதும் தான் செய்யும் வேலையில் முழு கவனமாக இருப்பாராம் நயன்தாரா. அதுதான் அவர் இந்த இடத்திற்கு வர காரணம் என்றும் கூறியுள்ளார் ஜாக்குலின். மேலும் நடிகர்களில் தனக்கு தனுஷ் மற்றும் சிம்புவை மிகவும் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார் ஜாக்குலின்..