ஆரவ்வை இழுத்து வைத்து மசாஜ் செய்த ஜூலி..!


பிக்பாஸ்.. ஒரே வீடு, இப்போது இருப்பதோ புதிதாக வந்த பிந்து மாதவியுடன் சேர்த்து மொத்தமே பத்து பேர் தான். இருக்கும் ஆண்களில் ஆரவ் தான் திருமணமாகாதவர்.. அந்தவகையில் திருமணமாகாமல் அங்கே இருக்கும் பெண்கள், வேறு ஆண்களுடன் பழக வாய்ப்பில்லாமல், காலப்போக்கில் ஆரவ்வின் பக்கம் ஈர்க்கப்படுவதில் வியப்பில்லை தான். அந்தவகையில் இதில் ஓவியா முந்திக்கொண்டு ஆரவ்விடம் தனது காதலை வெளிப்படுத்தினார்.

அதற்கு முன்புவரை, ஓவியாவிடம் நெருங்கி வழிந்து சில்மிஷங்கள் செய்த ஆரவ்விற்கு, இப்போது ஓவியா, தானே வந்து காதலை சொன்னதும் அவர் மேல் கசப்பு ஏற்பட்டு விட்டது. பெண்களே வலிய போய் காதலை சொல்லும்போது, பெரும்பாலான ஆண்களின் மனநிலை இதுதான். அதில் ஆரவ் மட்டும் விதிவிலக்கா என்ன..?

போதாக்குறைக்கு காயத்ரி கூடவே இருந்து தூண்டிவிடுகிறார்.. இதுதான் சரியான தருணம் என நினைத்த ஜூலி, ஆரவ்விடம் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்குகிறார்.. அந்த சூழலில் தன்னைவிட்டு விலகிப்போகும் ஆரவ்விடம் தனியே பேச முயற்சிக்கிறார் ஓவியா.

ஆனால் அதை தவிர்ப்பதற்காகவே எப்போதும் நான்கு பேருடன் சேர்ந்தே காட்சியளிக்கிறார் ஆரவ். அந்த நேரத்தில் ஜூலி காட்டும் தந்திரம் இருக்கிறதே..? அப்பப்பா.. ஆரவிற்கு மசாஜ் பண்ணிக்கொண்டு இருக்கும் ஜூலி, ஓவியா அங்கே வந்து அமர்ந்ததும் ஆரவ்விடம் தனது நெருக்கத்தை காட்டிக்கொள்வதற்காக, இன்னும் கொஞ்சம் நல்லா சாய்ஞ்சுக்க ஆரவ் என அவரை இழுத்து பிடித்து தன் வயிற்றில் சாய்த்துக்கொள்கிறார்..

இதைப்பார்த்து வெறுப்பாகும் ஓவியா அங்கிருந்து கிளம்புகிறார்.. இதுதானே காயத்ரி-ஜூலி கூட்டணி எதிர்பார்த்தது..? இந்த ஜூலி தான் தமிழகர்களின் உரிமையான ஜல்லிக்கட்டுக்காக குரல் கொடுத்த வீரப்பெண்மணி என்பது தான் இதில் ஹைலைட். விளங்கிடும்..